உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 நிறுத்தப் போராட்டம் நடத்தியபோது, “ரயிலை நிறுத் தித் தண்டவாளத்தின் மேல் படுத்து விட்டால் மட்டும் திராவிட நாடு கிடைத்து விடுமா ?" என்று கேட்டார் கள். திரையுலகத்தின் மூலமாக நமது அறிவுக்கருத்துக் களைப் பரப்பிய நேரத்தில் "ஒரு சில கருத்துக்களுக்கு இடங்கிடைத்த காரணத்தால் திராவிடநாடு-கிடைத்து விடுமா?" என்று கேட்டார்கள். 86 .08 சந்திரோதயம்"; " சந்திரமோகன் " ; "வேலைக் காரி ";"ஓர் இரவு"; "மணிமகுடம்”; “தூக்குமேடை" சர்வாதிகாரி"; "இலட்சியவாதி" போன்ற நாடகங் கள் நடத்தப்பட்ட நேரத்தில், அந்தப் படங்கள் வெளி வந்த நேரத்தில் "இவற்றால் திராவிடநாடு கிடைத்து விடுமென்றா கருதுகிறீர்கள் ?" என்று கேலியாகக் கேட்டார்கள். இப்படி. நாம் எந்தக் காரியம் செய்தாலும் நம் கொள்கை நிறைவேறி விடுமா - என்று கிண்டல்பேசி யவர்கள்தான் இன்றைய தினமும், சட்டமன்றத்திற்கு செல்லுகின்ற நேரத்திலும் அதே பாதையில் நின்று- அதே பாணியில் கேட்கிறார்கள். உள்ளபடியே நான் சொல்ல விரும்புகிறேன். வாழ்க்கையிலே நாம் அடிக்கடி காணுகிற நிகழ்ச்சிகள் மூலம்! காதலனும், காதலியும் சந்தித்து, ஒருவரை யொருவர் கண்களால் பார்த்துக்கொள்ளும் நேரத் தில், அதை ஒரு விஷமக்காரன் கவனித்துவிட்டு, 'இவர்கள் இருவரும் இப்படி அடிக்கடி கண்ணோடு கண்ணினை கலந்து காதல் புரிகிறார்களே அதனால் 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/85&oldid=1703271" இலிருந்து மீள்விக்கப்பட்டது