உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 திராவிடப்பாட்டாளி மக்கள், அளவற்ற இன்னல்களை அனுபவிக்கிறார்கள். அவர்களுடைய வாழ்வெல்லாம், நலமெல்லாம் பெருக நாம் எத்தகைய தியாகத்தைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை யும் எண்ணாமலில்லை எங்கள் சிந்தை! சட்ட ய மன்றத்தை உதறி எறிந்துவிட்டு, வெளியே வாவென்று நீங்கள் அழைக்கின்ற நேரத் திலே, வெளி வந்தே தீருவோம். எங்களை அனுப்பிய வர்கள் நீங்கள். உங்களுக்காக அனுப்பியிருக்கிறீர் கள். இந்த நாட்டுக்காக அனுப்பி இருக்கிறீர்கள். இந்த நாட்டினுடைய விடுதலைக்கு அங்கும் ஏதாவது செய்ய முடியுமா, என்பதற்காக அனுப்பப்பட்டிருக்கி றோம். அப்படி அனுப்பிய நீங்கள், என்ன கட்டளை இடுகிறீர்களோ. அவைகளைச் சீர்தூக்கிப் பார்த்து அந்தக் கட்டளையை நிறைவேற்றுகின்ற காரியத்தில் ஈடுபடுவோ மென்பதைத் தான் சொல்ல விரும்புகிறேன். நான் காங்கிரசுக்காரர்கள் வெற்றிபெற்று; அல்லது வேறு கட்சிக்காரர்கள் வெற்றிபெற்று அவர்களுக்குப் பாராட்டுவிழா நடைபெறுகிறது என்றால், ஐந்தாண்டு காலத்திலே ஒரு முறை நடைபெறலாம் - இன்னொரு முறையும் நடைபெறலாம்! அவர்கள் பதவியை இழக்கிற நேரத்தில் - உங்களுடைய பதவி இதோடு முடிந்துவிட்டது. என்று மக்கள் பாராட்டலாம்! நாங்கள் அப்படியல்ல! இந்த ஐந்தாண்டு காலத்தில், திராவிட முன்னேற்றக் கழக சட்டசபை உறுப்பினர்களுக்கு, பல முறை நிச்சயமாக "பாராட்டுவிழா" நடத்தப்போகிறீர்கள். எதற்காக பதவி இ நல்ல வேளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/91&oldid=1703640" இலிருந்து மீள்விக்கப்பட்டது