பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். பன்னிரண்டாம் அதிகாரம். விக்கிரமசோழனுக்கு கி. பி. 1118-ல் பட்டாபிஷேகமாயிற்று. இவனும் கலிங்கஞ்செற்றதாக இவன் மெய்க்கீர்த்தி கூறுவதன்றி, உலாக்களிலும், இவன் கலிங்கத்துப்பரணி கொண்டானென்று சொல் லப்படுகிறது. ஆயின் இவன் கலிங்கத்துக்குத் தன்னாட்சிக்காலத்திற் படையெடுத்துப் போகவில்லை. தன் தகப்பன் காலத்தே, கருணாகரத் தொண்டமானுடன் சென்று.... கலிங்கத்திற் போர் செய்ததை அது குறிக்கின "தேயொழிய வேறில்லை. இவன் தன் தமையன் வீரசோழ னுக்குப்பிறகு வேங்கையில் பிரதிநிதியாயாசாண்டுகொண்டிருந்து, தன் தகப்பன் குலோத்துங்கசோழனது கடைசிநாட்களில் அவனுக்கு உ. கவியாக அவனிருந்தவிடத் திக்கு வந்துசேர்ந்தான். அப்பொழுது, வெலநாண்டு என்னும் காட்டசகிைய சோடன் என்பவனைக் குலோத் துங்கன் வேங்கையையும் ஆள உத்தரவளித்தான். ஆயின் பிற்கால க்தே இவன், கீழ்நாட்டுச் சாளுக்கியவிக்கிரமாதித்தனுடன் சேர்ந்து வேங்கையை மெள்ளத் தன்ன தாக்கிக் கொண்டுவிட்டான்; பிறகு விக்கி படமசோழன் அதனை வென்று கைக்கொண்டான். இவ்வரசன் 18-வருஷமரசாண்டான். இவனுடைய ஆறாம் வரு ஷத்தில் நாடெங்கும் பரவிய ஒர் பெருத்த ஷாமம் வந்தது; இது, “திருப்போ நகரப் பெருங்குறி மகாசபையோம்; இவ்வூர் வடபிடாகை திருச்சடைமுடிமகாதேவர் கோயிலிற் கூட்டங்குறைவறக் கூடியிருந்து சிலாலேகை பண்ணின பரிசாவது; காலம்பொல்லா தாய் கம்மூர் அழிந்து குடியோடிப்போய்க் கிடந்தமையில்" என்று கோவிலடிச்சாஸனம் ஒன்றி லும், “இக்காசுபதின்மூன்றும் இவ்வானிமாசத்து இப்படிக்கொள்ள வேண்டித்து, காலப்பொல்லாங்கை பரிஹரித்திக்கொண்டு ஊரிரக்ஷித் துக்கொடுக்கைக்காக” என்று உடையார் கோயிற் சாலனமொன்றிறும், "இவ்வூர், யாண்டு ஆறாவது, பெருவெள்ளக்கொண்டு வரும் போகமும் • Ep. An. Rep. for 1960-1, No. 276 ofl1901, t Ibid for 1901-2. No. 404 of 1902.