பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். சோணாட்டில் திருக்காட்டுப்பள்ளி, * ஸ்ரீரங்க : முதலிய விடங்களிற் காணப்படுவதாலும், இவன் மெய்க்கீர்த்தி "சோணாடுவழங்கிய சுந்தர பாண்டியன்" என்று சிறப்பித்தலாலும், சோணாடு இவன் கையிலகப் பட்டு, பின் ஏதோ ஒரு காரணத்தால் சோழ சக்கரவர்த்திக்குக் கொடுக் கப்பட்டது என்பது விளங்கும். அஃதெவ்வாறு நேர்ந்ததென்பதைக் கீழே கவனிப்போம். மாறவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தியில், ...பொன்னி சூழ்நாட்டுப்புலியாணைபோயகல, கன்னி சூழ்நாட்டிற்கயலாணைகைவளா, வெஞ்சினவிவுளியும் வேழமும்பரப்பித், தஞ்சையுமுறந்தையுஞ்செந்தழல் கொளுத்திக், காவியுநீலமும் கின்றுகவினிழப்ப, ஆவியுமாறுமணிநீர் நலனழித்துக், கூடமுமாமதிளுங்கோபுரமுமாடாங்கும், மாடமுமாளி கையுமண்டபமும்பலவிடித்துத் தொழுது வந்தடையாநிருபர் தந்தோ கைய, ரழுதகண்ணீராறுபாப்பிக், கழுதைகொண்டுழுதுகவடிவிச்சுச்செ ம்பியனைச், சினம்பிரியப்பொருதுசுரம்போகவோட்டி, பைம்பொன்மணி முடிபறித்துப்பாணனுக்குக்கொடுத்தருளி, பாடருஞ்சிறப்பிற்பருதிவா ன்றோயு, மாடகப்புரிசையாயிரத்தளியில், சோழவளவன் அபிஷேகமண் பத்து வீராபிஷேகம்பண்ணி,..... கூராழியுஞ்செய்யதோளுமேகொ ண்டுபோய், ஐயப்படாத அருமறைதேரந்தணர்வாழ், தெய்வப்புலியூர்த் திருவெல்லையுப்புக்குப், பொன்னம்பலம்பொலிய நின்றாடுவார்பூவையு டன், மன்னுந்திருமேனிகண்டு மனங்களித்து,...சோதிமண்டபத்திரு ந்து, சோலைமலிபுனற்சோணாடுதானிழந்த, தார்மாலைமுடியுந்தரவருக வென்றழைப்ப, வானநிலை குலைபவாளரிக்கப்புறத்துப், போனவளவனுரி மையுடன் புகுந்து, பெற்றபுதல்வனை நின்பேறென்று முன்காட்டி, வெற்றி யரியணைக்கீழ்வீழ்ந்து தொழுதிப்பக், கானோடி முன்னிகழ்ந்தவெம்மை யெலாங்கையகல, தானோதகம்பண்ணி, ... இதுபிடிப்பாடாகவெனப்பொங் குதிரைஞாலத்திப்பூபாலர்தொழ கிளம்குஞ், செக்கயல்கொண்டுன்றிரு முகமும்பண்டிழந்த, சோளபதியென்னுநாமமூந்தொன்னகரு, மீள வழங்கி விடைகொடுத்தருளி,...முன் நமக்கு முடிவழங்குசேவடிக்கீழ்,

  • Ep. An. Rep. No. 52 of 1897. | Ibid. No. 133 of 1894.