பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருத்துவ மனையில்

இனிஇவ் வுலகில் எதனை நம்பி எதிர்பார்ப்பேன்? என்னை வந்து பார்க்கின் றார்! விடை பெறுகின்றார். இனிதாய் மீனை வெங்கா யத்தால் சூழல்போல் என்னை அவர்கள் பெருமை மதிப்புடன் சூழ்ந்திடுவார்.

ஐந்து மணிக்கே ஆளற்று மூடும் பணிமனையில் அமைதி யாக அழியத் தான்நாம் பிறந்தோமா? மைந்துடன் இன்னும் உள்ளேன் உயிருடன் என்பதனை மக்கள் என்றன் நெஞ்சத் துடிப்பால் உணர்கிலரா?

விடடா சோர்வை; வாழ்நாள் இன்னும் விரியுமடா! மனத்துள் துணிவு சற்றே தளர்ந்தது; அதனால்என் ? அடடே நெஞ்சில் உள்ள குத்துச் சண்டையிலே ஐயம் இல்லை அடித்து நொறுக்க அணித்துள்ளான்.

என்னே இந்தப் பிரியா விடைகள் குப்பைகளே! சிவந்த இரத்த மதுதான் நரம்பில் வழிகையிலே என்னே இந்த வாழ்த்துப் பாடல் வழியனுப்பல் உயிரோடு இருக்கையில் இறப்பைப் பற்றிப் பேச்சேனோ?

என்றன் உயிர்த்தீ கொழுந்துவிட் டெரிந்து சுடர்ந்திடுமே, ஆண்டுகள் எனக்கே உறுதி மொழியை வழங்கிடுமே, குன்றுதோள் மறவர் துமுக்கி யுடனே நடந்திடுவார் குழந்தைகள் ஆடத் தாயார் வெளியே கொணர்ந்திடுவார்.

என்னையும் இந்த மருத்துவ மனையையும் விழிப்புடனே இருந்து முதிர்ந்த இரவு காவல் காக்கட்டும்... இன்னே வருவாய் காலைப் பொழுதே, என்தனிமை அறையின் சாளரம் துமுக்கிக்கு உற்ற புழைசெய்வேன்.

203