பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

↑ {)

முதல் இரவு; எங்கள் முதல் இரவு; மாஸ்கோவில் சர்க்கஸ்காரர்கள்போல் உறைபனிமேல் கடந்து சென்று, பார்ப்பதில் தொடங்கிற்று.

சர்க்கஸ் முடிந்ததும், தெருவிற்கு வந்தோம். வானிலையில் மாற்றமில்லை. மஞ்சு பெய்து கொண்டி ருந்தது. குளிர்காற்று சீறிற்று. தரையில் உறைபனி. மீண்டும் தத்தளித்து, அதன்மேல் நடந்து சென்ருேம். தலைக்குக் குல்லாயும் உடம்பிற்குப் பேரங்கியும் அணிக் திருந்ததால், விறைத்துப் போகாமல் தப்பிளுேம். எங்கள் காரை அடைந்தோம். காரோட்டி, பணிவோடு, கதவைத் திறந்தார். சட்டென்று உள்ளே நுழைந்து கொண் டோம்.

'இப்போது, ஒட்டலுக்குத் திரும்பலாமா? வேறு. எங்காவது போகவேண்டுமா?' என்று கேட்டார், தோழர் வலாடிமீர்.