120
120
மற்ருெரு நாள். இன்னொரு கனவு.
பலர் சூழ்ந்துகொண்டு அவரை அமுக்கிக் கொலை முயற்சி செய்வது போல் கனவு கண்டார்; கூச்சலிட்டார்.
கூச்சல் கேட்டார்கள் வார்டர்கள். ஓடிவந்தார்கள்; விசாரித்தார்கள்.
இவ்விதம் அடிக்கடி கனவு கண்டார் ஜவஹர்.
வைத்திய சிகிச்சைக்காக கல்கத்தா வந்திருந்தார் கமலா சிறைக்குச் சென்றார்; ஜவஹரைக் கண்டார்; பேசினார்.
கமலாவின் வருகை நேருவின் சோர்வைப் போக்கியது. சிறிது உற்சாகமாக இருந்தார் ஜவஹர்,
வெயில் காலம் வந்தது. சிறையிலே உஷ்ணம் தாங்க முடியவில்லை. மிகவும் அவதியுற்றார் நேரு.
மே மாதத்திலே ஒரு நாள்; காலையில் சிறை அதிகாரி வந்தார். ' புறப்படுங்கள் ” என்றார்.
' எங்கே?' என்று கேட்டார் ஜவஹர். ' வேறு சிறைக்கு” என்ற பதில் வந்தது.
மகிழ்ச்சியுற்றார் ஜவஹர் இந்த வெம்மை நரகம் அலிப்பூர் சிறையிலிருந்து மாறுகிறோம்" என்பது பற்றி மகிழ்ச்சி.
"எங்கு கொண்டு போகிறீர்கள்?" " டேராடுன்' என்ற பதில் வந்தது. மிக்க மகிழ்ச்சியுற்றார் நேரு. ஏன்? டேராடூன் மிகவும் குளிர்ந்த இடம். இயற்கைக் காட்சிகள் மலிந்த இடம். மனோரம்யமான இடம். மொத்தத்தில் ஜவஹருக்கு பிடித்தமான இடம்.