பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

லா, ச. ராமாமிருதம் * 39

சுமார் நான்கு மாதங்களுக்கு முன் விசாலம் இங்கு வந்திருந்தாள். இப்போது எனக்கு ஒரு சந்தேகம் கிளம்பி யிருக்கிறது. அவளுடைய இயற்பெயரில் அழைக்கவா? அபிதா என்று நான் சூட்டிய பெயரில் விளிக்கவா? என்னைப் பொறுத்தவரையில் இரண்டுமே அவளுக்குப் பொருந்தும். ஆனால் இதில் என் மண்டையில் குழப்பிக்கப் போவதில்லை. அந்தந்த சமயம் எப்படி எப்படித் தோன்றியதோ அப்படி இருந்துவிட்டுப் போகட்டுமே.

நான்கு மாதங்களுக்கு முன் விசாலம் என்னைப் பார்க்க வந்திருந்தாள்- போனவருடம் நான் சறுக்கி விழுந்து என் முதுகெலும்பு உடைந்தது பற்றி விசாரிக்க. இப்போதுதான் அவளுக்கு ஒழிந்தது. அதைப்பற்றி குற்றம் கொள்வதற் கில்லை. அவளது பிழைப்பு அப்படி, இதோ அரைமணி நேரத்தில் புறப்பட்டுவிடுவாள். அலண்டு விட்டாள்.

'ஐய்யய்யோ- அடையாளமே தெரியலையே. உள்ளுக்கு வாங்கிட்டீங்களே?”

“அதைப்பத்தி எல்லாம் நினைக்காதே விசாலம். வயசாகல்லையா?”

“வயசென்ன வயசு?” "அவருக்குத் தொண்ணுாறு ஆச்சு. உங்களைவிட திடம்மா இருக்கிறாரு சாதத்தை மட்டும் புனர்பாகமாய் வடிக்கணும். இல்லாட்டா வயித்துப்போக்கு வந்துடுது. மத்தபடி மத்த சமையல், இட்லி தோசை அதுக்கெல்லாம் பங்கமில்லை. நீங்க தேய்ஞ்சு போயிட்டீங்களே. சாப்புட lங்களா இல்லையா?”

“எனக்குப் பசியே இல்லை விசாலம்.” "அப்படி இருக்கக்கூடாது. மல்லுக்கட்டியாவது கொஞ்சம் உள்ளே இறக்கணும்.”