பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 179

சாந்தி முகூர்த்தங்கூடச் செய்து முடித்துக் கொண்டுவிட்டீர்கள் என்பதை அவர்களுக்குக் காட்டி, நிச்சயதார்த்தம், கலியாணம் முதலியவைகளெல்லாம் இனி செய்வது அநாவசியமான பணச்செலவும், அர்த்தமில்லாத காரியமும் ஆதலால், அவர்கள் தத்தம் வீடுகளுக்குப் போகும் படி சொல்லியனுப்பி விடலாம் என்று நினைத்தேன். தான் ஆடாவிட்டாலும், தன் சதை ஆடும் என்பார்களல்லவா? அதுபோல, ஐயோ பாவம்! நம்முடைய அக்காளை அவமானப்படுத்தக் கூடாது என்ற மன இரக்கத் தினால் பேசாமல் இருந்தேன்; இல்லாவிட்டால் இந்நேரம் உன் மானத்தைக் குலைத்து ஊரெல்லாம் உன்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கும்படி செய்திருப்பேன். இருக்கட்டும். இப்போதும் இந்த விஷயத்தை நான் இவ்வளவோடு விடப்போவதில்லை. இதோ நான் போய், இந்தச் சங்கதியை நம்முடைய அம்மாளிடத்திலும், இவருடைய அம்மாளிடத் திலும் சொல்லி உனக்குத் தக்க சிrை நடத்தி வைக்கிறேன். நீ வீட்டிற்கு எஜமானியென்கிற கருவத்தினால், எதை வேண்டுமா னாலும் செய்யலாமென்று நினைத்துக் கொண்டாயா? இருக்கட்டும்; இதோடு உன் கொட்டத்தை அடக்கி விடுகிறேன்” என்று எள்ளும், கொள்ளும் வெடிக்கத் தகுந்த் மகா கடுமை யான முகத்தோடு கூறிவிட்டு, அப்புறம் திரும்பி நிரம்பவும் முடுக்காகவும், முறுக்காகவும் நடக்கலானாள்.

அவள் சொன்ன குரூரமான வார்த்தை ஒவ்வொன்றும் நிரம்பவும் கூர்மையான ஒவ்வோர் ஈட்டியால் சுருக்கருக்கென்று குத்துவது போல, கோகிலாம்பாளது செவியிலும், மனத்திலும் ஆணியரைவது போல வந்து பாய்ந்தது. அவளது ஒவ்வொரு வார்த்தையின் உரத்தையும் சகிக்க மாட்டாமல் கோகிலாம் பாளது உயிர் தள்ளாடியது. உடல் குன்றியது. தனது தங்கை தன் மீது குற்றம் சுமத்தியது நியாயம் போலவும் தோன்றியது. அநியாயம் போலவும் தோன்றியது. தனக்கு நிச்சயதார்த்தம், கலியாணம், ருதுசாந்தி முகூர்த்தம் முதலிய சடங்குகளெல்லாம் நிறைவேறுமுன், தான் கண்ணபிரானோடு அப்படிப்பட்ட சரஸ் ஸல்லாபங்கள் செய்தது தவறான காரியமென்பது அவளது மனதில் நன்றாகப் பட்டது. தனது தேக பரிசுத்தம் முற்றிலும் களங்கப்படாவிட்டாலும், கண்ணபிரான் செய்த சொற்ப