பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணக் கோலம் - கிரகப்பிரவேசம் 219

படத்தை இவர் எடுத்து வந்து, அதை அந்த அசிஸ்டெண்டு கலெக்டருக்குக் காட்டி அவள் தான் தம் தங்கையென்று சொல்லி விட்டார். அந்தப் பெண் நல்ல ரூபலாவண்யம் பொருந்திய சிறு பெண். ஆகையால், அவளைக் கண்டு அந்தக் கலெக்டர் மோகித்துப் போய் அவளையே கட்டுவதென்று தீர்மானித்து, அரை மனசாக இருந்த தம் தாய் தகப்பன்மாரும் அதற்குச் சம்மதிக்கும்படி செய்து விட்டார். இந்த இரண்டு கலியாணங் களும் அசிஸ்டெண்டு கலெக்டர் வீட்டில் வருகிற வெள்ளிக் கிழமை காலையில் நடக்கப் போகிறது. புஷ்பாவதி மறுபடி கலியாணம் செய்வதற்கு இணங்கவே இல்லை. அவளை அடிப் பதாகவும், கொல்வதாகவும், வெளியில் துரத்தி விடுவதாகவும் பயமுறுத்தி இந்தக் காரியத்திற்கு அவள் இணங்கும்படிச் செய்துவிட்டார். நானும், அவளும் குரங்கின் கைப் பூமாலைப் போல இவரிடம் அகப்பட்டு வேறு எங்கேயும் போக வழி இல்லாமல் தத்தளிக்கிறோம். நானும், அவளும் இவரிடம் நிரம்பவும் வாஞ்சையுள்ளவர்கள் போலவும், இவரது சொல்லை மீறாதவர்கள் போலவும் நடிக்க வேண்டியிருக்கிறது. என்னை இவர் தம்முடைய இன்னொரு தங்கையென்றும் மற்றவரிடம் சொல்விக் கொள்ளுகிறார். இப்போதே என் நிலைமை மகா கேவலமாகிவிட்டது. இனி இவருக்கு அழகான சிறிய பெண் ஜாதியும் ஏராளமான செல்வமும் வந்துவிட்டால், என்னை இவர் ஒரே நாளில் காலால் மிதித்து, உயிரோடு பூமியின் கீழ் புதைத்து விடுவார் என்பது நிச்சயம். இவர்கள் புதுச்சேரியில் இருந்தபோது இவரிடம் இருந்த வீராசாமி என்ற சேவகன் தான் என் புத்தியைக் கலைத்து, என்னை இவரிடம் சிநேகம் செய்து வைத்தது. நாங்கள் ரகளிலியமாக அவ்விடத்தைவிட்டு வந்த பிறகும் அவன் எங்களோடு கூடவே வந்து இப்போதும் இவரிடத் திலேயே இருக்கிறான். இவர் செய்கிற எல்லா மோசங்களும் திருட்டுகளும் அவனுக்குத் தெரியும். ஆனால் இவர் என்னை அநாதரவாக விட்டு வேறொரு பெண்ணைக் கட்டுவதிலிருந்து அவனுக்கும் இவர் மேல் உள்ளுற பகைமை உண்டாயிருக்கிறது. அவனுடைய உதவியினால் தான் நான் இந்தக் கடிதத்தை அனுப்பச் சாத்தியப்பட்டது. இவரிடம் இருந்து ஒரு நாள் தள்ளுவது பெருத்த நரக வேதனையாக இருக்கிறது. இவர் பிராந்தி குடிப்பது கணக்கு வழக்கில்லை. அந்த மயக்கத்தில் இவர் ஒரு