பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டு மேளம் <e 雷89 எழுந்துபோய் ஜன்னலண்டை நின்றான். அவனுக்கு இன்னும் இருப்புக் கொள்ளவில்லை. வெளியே நிலவுக்கு முன் மேகங்கள் சரசரவென விரைந்துகொண்டிருந்தன. "-இது மாதிரிதான் வானம் இருந்தது. ஆனால் சந்திரன் தெரியவில்லை. தேங்காயைத் துருவி மலைமலையாகக் குவித்திருந்தது. என் கண்ணுக்கு எட்டிய வரையில் இந்த மேகங்களில் கற்கண்டு கட்டிகள் போல் நக்ஷத்திரங்கள் வாரியிறைத்திருந்தன. . "அப்பொழுது யாரோ பாடும் குரல் கேட்கிறது. ஆண் குரல். ஹிந்துஸ்தானி சங்கீதம். "கஜல் என்பார்களே, அது. இடையிடையே நீண்ட தொகையறாக்கள். குரலோடு இழைந்து இழைந்து பத்து சாரங்கிகள் அழுகின்றன. திடீரென்று தபேலாவின் மிடுக்கான எடுப்புடன் ஆரம்ப அடியில் பாட்டு முடியும் போதெல்லாம், இன்பம் அடிவயிற்றைச் சுருட்டிக் கொண்டு பகீர் பகீர் என்று எழும்புகிறது. அந்த மாதிரி குரலை நான் கேட்டதேயில்லை. என் எலும்பெல்லாம் உருகி விடும் போலிருக்கிறது. நான் அதைத் தேடிக்கொண்டே போகிறேன். “நான் போகிற வழியெல்லாம் யார் யாரோ மேடுகளிலும், பள்ளங்களிலும் மரத்தடிகளிலும், பரந்த வெளிகளிலும் கூட்டங் கூட்டமாயும், கொத்துக் கொத்தாயும், தனித் தனியாயும் அசைவற்று உட்கார்ந்திருக்கிறார்கள். நான் போகப் போக, பாட்டின் நெருக்கமும் இனிமையும் இந்த உடல் தாங்கக் கூடியதாயில்லை. “பாடும் ஆளும் தென்படுவதாயில்லை. என் எதிரே கட்டிடமுமில்லை. ஒரே பரந்த வெளிதான். ஆனால் குரலின் கணகணப்பும் நெருக்கமும் இனிமையும் ஒரே இரைச்சலாய் வீங்கி, என்மேல் மோதுகையில் எனக்கு ஏற்பட்ட தவிப்பு இன்னமும் தணிந்தபாடில்லை. திகைப் பூண்டாமே, அதை