பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஜனனி & 11 கொண்டு வந்து குழந்தைக்குப் புகட்ட ஆரம்பித்தாள். வெள்ளிக் கரண்டியில் கொஞ்சங் கொஞ்சமாய் ஊட்டு கையில் குழந்தையின் கடைவாயில் பால் வழிந்தது. திடீரெனக் குழந்தையின் முகத்தின்மேல் இரண்டு நெருப்புத் துளிகள் விழுந்தன. அம்மாளின் கண்ணிர் கனலாய்க் கொதித்தது. அதன் வெம்மை அம்பாளின் உள் இறங்குகையில், இவள் ஆத்திரப்படுவது வெறும் கோபத் தினால், அல்ல; வெதும்பிப் போன தன் வாழ்க்கையின் வேதனை தாங்காமல் துடிக்கிறாள் என்று அவள் உள்ளத்துக்குச் சொல்வது போல் இருந்தது. குழந்தைக்குப் பசி தீர்ந்துவிட்டது. அம்மாளின் தாலியைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு துங்க ஆரம்பித்தாள். அம்மாவுள் கல்லாய் உறைந்து போயிருந்த ஏதேதோ, இப்பொழுது நெய்ப் பாறை உடைவதுபோல் கிளர்ந்து உருகும் இன்பம் பயங்கரமாக இருந்தது. குழந்தையை இறுக அணைத்துக்கொண்டு தன் கணவரிடம் சென்றாள். “பார்த்தேளா குழந்தையை எவ்வளவு கனம்! என்ன பண்றேள், பஞ்சாங்கத்தைப் புரட்டிண்டு?” "நேற்று என்ன நக்ஷத்திரம், பார்க்கிறேன். ஜாதகம் கணிக்கலாமா என்று-” “சரியாய்ப் போச்சு! இது என்னிக்குப் பிறந்தது, எந்த வேளை, என்ன ஜாதின்னு கண்டோம்? இதைப்பத்தி நமக்கென்ன தெரியும்?” ஐயர் சிந்தனையில் ஆழ்ந்தார். அவர் மனைவியின் உள்வாக்கு அவளையும் அறியாமல், ஆதிபரையின் நிர்க்குண நிராமயத் தன்மையை வெளியிட்டது. வந்த குழந்தையை அங்கீகரிப்பதைத் தவிர அதன் ஆதியைச் சோதிக்க முயல்வதில் என்ன பலன்?