பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புற்று : 83 “ஒவ்வொருவருக்கும் ஊற்றிக்கொண்டு வருகையில் அவர்கள் கையில் வைத்ததும் அவரவர் முகங்கள் விதவிதமாய் ஆச்சரியமும், அசடும் வழிய தூக்கிவாரிப் போட்டாற் போல் சவுங்கி, சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் சவுங்குவதைக் காண்கையில் உள்ளுற ஆனந்தம் பொங்கியது. "ஒ Dam! இதென்ன பாயசம் உப்புக் கரிக்கிறது- என்று வீட்டு எஜமான் கத்தினார். நேரே என் பார்வை, பின்னால் கை கட்டிக்கொண்டு பந்தி நடுவில் நின்றுகொண்டு மேற் பார்வை பார்த்துக்கொண்டிருக்கும் என் முதலாளிமேல் பாய்ந்தது. நான் அவனைப் பார்த்ததை அவள் பார்த்து விட்டாள். 'பக்கென்று அந்தப் பெண் வாய்விட்டுச் சிரித்து விட்டாள். என் முதலாளி திகைத்து நின்றான். “சிரிப்பு என்ன வேண்டியிருக்கு- பார்ட்டி குட்டிச் சுவராப் போச்சே- சமையல்காரன் யார்?' என்று அவள் தகப்பனார் கர்ஜித்தார். "இதில் ஒரு நீதியிருக்கு, PaPa: ஒரு கரண்டி எண்ணெய் ஒரு படி உப்பில் கொண்டுபோய் விட்டுவிடும்-” “இது என்ன புதிர்? அவள் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, 'இல்லை; இது எனக்கும் இங்கே இன்னும் ரெண்டுபேருக்கும் தான் புரியும்- அது ஒரு பெரிய தமாஷ்!" என்றாள். அவள் வார்த்தைகளின் அர்த்தம் என் எஜமான் மண்டையில் ஊறுகையில் அவன் முகம் மாவாய்ப் பிசைந்தது. ஒசைப்படாமல் நழுவினேன். எங்கள் விடுதிக்கு ஒடினேன். மறு சொக்காயையும் வேஷ்டியையும் அவசர அவசரமாய்க் கைப்பையில் திணித்தேன். அவன் கண்ணில் படுமுன் கிளம்பி யாக வேண்டும்! பையைத் தூக்கிக்கொண்டு திரும்புகையில் வாசற்படியில் நிழல் தட்டியது. அவள் நின்றுகொண் டிருந்தாள்!