பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பாவம், அழகி ஒரு நல்ல கதாசிரியை. ஒரு நாவ லுக்கு ஐயாயிரம் பரிசை எதிர்பார்க்கிருள். அந்த வரையில் அதைப் பிறர்க்குக் கொடுக்காவிட்டாலு ‘ எழுத்தாளன் கற்பனையால் அந்தி நிலாவுக்கு தானே பரிசை அள்ளிக்கொடுத்திருக்கிறார்! அதோடு இவருடைய நாவலில் அழகி, பிள்ளையார்சுழி போட் டல்லவா நாவல் எழுத ஆரம்பிக்கிருள் அழகிக்குக் கிடைத்த பரிசு, அதாவது பணம், இவருக்கு எப்போ தும் நிறையக் கிடைக்கவேண்டுமென்று, அந்த விநா. யகரை நான் பிரார்த்திக்கிறேன்.

நாவலின் கடைசி முடிவைப் படிக்கும்போது, உள்ளம் உருகுகிறது. அந்த ரோஜா மணம் வீசி, இதழ் இதழாக உதிரும் தருணத்தில், கண்களில் நீர் பருகுகிறது. ஆனல், பிள்ளையார்சுழி போட்ட பலன், பண்புக்கு மாறுதல் இன்றி, அழகியை உயர் நிலையில் வைத்திருக்கிறார் நாவலின் ஆசிரியர்.

ஜாதி ரோஜா தங்க எழுத்து: பண்பு, 6676 இரண்டும் நிரம்பியது. பூவை ஆறுமுகம் தங்கமானவர். அவர் எழுத்து படித்தவர்களுக்கு நல்லதைத்தான்

செய்யும். இதற்கு நான் பொறுப்பு.

லாயிட்ஸ் ரோடு, }

T-14. கொத்தமங்கலம் சுப்பு.