பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மை உணர்த்திட வந்ததெது? ஊக்கம் உயிர்நோக்கம் தந்ததெது? எண்ணமெல் லாம்புது வாழ்வினிலே ஏற்றிய தெக்கட்சி நாட்டினிலே ? கண்ணனைய கட்சி காத்திடுவோம் கைநிறை யப்பொருள் சேர்த்திடுவோம். சின்னியம் பாளையத் தோழர்களை சிங்கார வேலன்போல் தீரர்களை பொன்மலை சிங்கையின் தியாகிகளை பொன்றாப் புகழ்க் கோவைத் தோழர்களை நன்மதுரை தந்த மானுடரை பன்மடங் காகப் பெருக்கும் கட்சி பணமின்றிச் சாகுமோ எங்கள் கட்சி ? ஆயிர மாயிரமாகச் சேர்ப்போம் அனைவரும் அப்பணியிற்கை கோப்போம் தாயென உள்ளதெல்லாம் சுரந்து தன்கை தனக்குத் துணை தெரிந்து தோயும் கட்சிப் பற்றில் தந்திடுவோம். தொழிலாளர் உழவர்முன் வந்திடுவோம் ஓயமாட்டோம் தலை சாயமாட்டோம் ஒரு லட்சம் காணாதுறங்க மாட்டோம். -167 (கட்சி)

(1947)

167