இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புதுவாழ்வினை ருசித்தேன் பொன்போல் கொள்கை பூண்டேனே புதுவாழ்வினை ருசித்தேனே இன்பால் உலகில் தானே இடர் தீர்க்கும் சமதர்மத் தேனே தொகையரு இளிப்பதும், இரப்பதும், இறப்பதும் தொழிலாளி என்றிடில் அவமானமே களிப்பதும், சுகிப்பதும் முதலாளி வாழ்வெனக் கண்டிடில் பெருஊனமே பாட்டு பாட்டாளி துயர்போ தாதா பரிதாபம் கரைபுர ளாதா தேட்டாளர் சதியொழி யாதா ஜெகமீது சமத்வம்வ ராதா தொகையரு உலகமும் பொருள்களும் மக்களின் சுகபோகம் ஒளிபெறச் செய்யும் உறுதி கலகமும் மோசமும் கவலையுந் துயரமும் கட்டோடு காணும் இறுதி (பொன்) 42 (பொன்)
(பொன்)
42