இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூவை. எஸ். ஆறுமுகம்Δ 123
புனிதத்தின் பாரிஜாதம் அவள்.
அனுராதாவின் அன்புக்கும் பாசத்துக்கும் பரிவுக்கும் அனுதாபத்துக்கும் பாத்திரமாகிறாள் இந்தப் பாலா.
பாலா பட்ட பாடுகள் கொஞ்சமா, தஞ்சமா ?
பாலாவுக்கெனக் காத்திருந்த அக்கினிப் பரீட் சைகள் ஒன்றா, இரண்டா ?
பாலாவுக்கென்றே தவம் கிடந்த போராட்டங்கள் அற்பமா, சொற்பமா ?
பாலா தமிழ்ச்சாதிப் பெண் ; ஆகவேதான், அவள் தன்னை எதிர்கொண்ட சோதனைகள் எல்லாவற்றையும் சமாளித்தாள். -
பாலா ஒரு தமிழச்சி ; எனவேதான், அவன் தமிழ்ப் பண்பு என்னும் பாரம்பரிய நெறிமுறையையே தன் உயிராகவும் தனது உயிர்ப்பாகவும் கொண்டு ஒழுகினாள்.
பாலாவின் கதை சிறிது ; ஆனாலும், அவன் கதையின் சோகம் பெரிது.
உண்மைதான் பாலா நல்லவள் ; நல்ல பெண்மணி.
ஒரு பறவையின் G கதை! - .
2 றவைத் தேடும் பறவையின் கதையை இப்போது நான் சொல்ல வேண்டும்.
கேளுங்கள் :