பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 61



கடையில், தான் விரும்பியதை இனாமாகப் படிக்க முடிந்ததில் அவன் பெரிதும் தேறுதல் பெற்றான். காதலைக் கட்டுக் கதை என்றும், அதைக் கதைகளிலும் காவியங்களிலும் படித்து அனுபவிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் உணரக்கூடிய அளவுக்கு அவனுக்குப் பரிபக்குவம் அளித்திருக்கிறீர்கள். இந்த லட்சணத்தில் அவனுக்கு இதயம் வேறு இருந்து தொலைத்தது. உள்ளமோ வெள்ளை. அதனால்தான், வாழ்க்கைக்குக் காதலை உயிர் நாடியென மதித்த அகல்யா, காதலை இழந்ததுடன் நிற்காமல், கற்பையும் இழந்து, ‘என்னைப் போன்றவர்களை உங்களைப் போன்ற இதயமுள்ளவர்கள்தான் ஆதரிக்க வேண்டும்’ என்ற பீடிகை போடத் துணிகின்றாள் போலும் நப்பாசையின் தோள்களை நைந்த ஆசை பற்றுவதற்கு முன்னமேயே அவர்களுக்குள் காதல் மறு பிறவி எடுத்து விடுகிறது. காதல் எனும் பசியை அடக்கித் தூங்க வைக்கக் காசு பணம் குவிக்க வேண்டுமென்று தவம் இருக்கிறான் கனகலிங்கம். ஒன்றியாகப் போனவன், கலை ஞானபுரத்திலிருந்து திரும்புகையில், ஒன்றில் ஒன்றாகித் திரும்புகிறான். ரெயிலடியில், அவனுடன் அகல்யாவைக் கண்ட அவளது முதலாளி அவனைத் தவறுபடக் கருதி விடுகிறார். வந்தது ஆபத்து. அவனே தன் தமையனாரின் மகளைக்கெடுத்தவன் என்று தீர்மானித்து, அவனை வேலையை விட்டு நீக்கிய தோடு திருப்தி கொள்ளாமல், அவனை ஆள்வைத்துக் கொன்று உ ல க த் ைத வி ட் டே நீக்கி விடுகிறார். அகல்யாவைக் கெடுத்தவனோ இந்திரன் ! ஆனால், ஆள் மாறாட்டம் உம்மைப் பழவினையின் உருவத்தில் வந்து சிரிக்கிறது. பாலும் பாவையும் கெட்டுவிட்டால் பயனில்லை என்ற சமுதாயத் தத்துவம் சமையற்காரன் மூலம் அவள் காதுகளில் ஒலிக்கிறது. உடனே அவளது கண்கள் திறக்கின்றன. எளிய முறையிலே அவளை சாகடித்து விட்டீர்கள். எழுத்தாளர்களின் தலைவலியை மிக எளிதில் போக்க வல்லது ஆயிற்றே ஆழி ?