பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

அந்த டீயைக் குடிச்சா நீ மயக்கம் போட்டுக் கீழே விழுந்திடுவே!??
  • "60) 3-60ΤΙΤ உநல்லதுன்னு பாட்டிசொன்னாளே!??

"அதிலே அபினைக் கலந்திருக்கா1?? 'அபினா? அது என்னது? விஷமா???

வசந்தி கேட்டிக்கொண்டிருக்கும் போதே, போவி! உன்னை இன்னிக்கு ஒழிச்சுப்புட்டுத்தான் மறு சோலி!” என்று மூலையிலிருந்த அரிவாள் மணையை எடுத்துக்கொண்டு சங்கர் மீது பாய்ந்தாள் கிழவி. சட்டென்று சங்கர் இடது காலால் லேசாக ஒரு தட்டுவிட்டான்-மறுநிமிஷம் வேரற்ற மரம்போல் கிழவி தலைகுப்புறவிழுந்தாள். நீட்டிக்கொண்டிருந்த ஒன்றிரண்டு பற்களும் உடைந்து அவளது வாயிலி ருந்து ரத்தம் பீரிட்டு வந்தது.

வலி பொறுக்க மு டி யா ம ல் குய்யோ, முறையோ!' என்று கத்தியபடி கிழவி தரையில் புரண்டு கொண்டிருந்தாள்.

நிமிச நேரத்துக்குள் இத்தனையும் நிகழ்ந்து விட்டது. திக்பிரமை பிடித்தாற்போல் நின்று கொண் டிருந்த வசந்தியின் கையைப் பிடித்து வெளியே அழ்ைத்துக்கொண்டு வந்த சங்கர், கிழவி இருந்த அறையை இழுத்துத் தாளிட்டான். இருவரும் முன் ஹாலுக்கு வந்து விட்டார்கள்.

இதெல்லாம் என்ன சங்கர்? கிழவியை ஏன் இப்படிக் கீழே தள்ளினே? அவ செத்துப் போயிட்டா???