பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 "ஆமாம்.' அப்பாகிட்டே ஏது? அவருக்கு எதுக்குத் துப்பாக்கி??? துப்பாக்கி மட்டுமா? விஷம் கூட உங்கப்பா கிட்டே இருக்கு இப்படிக் குறுக்கு வழியிலே பணம் சம்பாதிக்கிறவங்ககிட்டே - இது மட்டுமில்லே; இன்னும் என்னல்லாமோ ஆயுதம் இருக்கும் - அகப்படறமட்டும் எதிரிகளைச் சுட்டுக் கொல்லு வாங்க. அகப்பட்டுக்கிட்டா - மானம்தான் பெரி சுன்னு நினைச்சுத் தாங்களே உசிரைப் போக்கிக்கு வாங்க!?? இதைக் கேட்டதும் வசந்தி அப்படியே அதிர்ந்தே போனாள். தன்னையுமறியாமல் அவள் விக்கி விக்கி அழுதாள். அந்த நள்ளிரவில், தாயற்ற அந்தச் சிறு பெண்ணின் விம்மல் ஒலி - தீனமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. 'வசந்தி, ஏன் இப்படி அழறே! இப்போ என்ன நடந்துட்டுது? அடடே.நாளைக்கு உங்க அப்பா, ஜாம் ஜாம்னு உடம்பு குணமாகி வீட்டுக்கு வந்துடப் போறாரு. அப்புறம் உனக்கு என்ன பயம்?' என்றாள் கிழவி. வசந்தி அழுவதை நிறுத்தி விட்டு ஒருமுறை தீர்க்கமாகக் கிழவியைப் பார்த்தாள்.

  • நீதானே கொஞ்ச முன்னாடி சொன்னே, சங்கர் எல்லா ரகசியத்தையும் தெரிஞ்சுக்கிட்டு ஓடிப் போயிட்டான்னு!??