பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 தான். அவ்வப்போது அவனுக்குப் பணம் தேவைப் "பட்டால் பட்டாமணியம் தாராளமாக அனுப்புவார். பட்டாமணியத்தின் இந்த மனமாற்றம் சந்தானத் திற்கு மகிழ்ச்சியாகி இருந்தது. சங்கரை எண்ணும் போதெல்லாம் அவர் உள்ளம் பூரிக்கும். காரணம் அவரைக் கெளரவமாக மீட்டு உதவியதற்காக மட்டுமல்ல; அவன் படிப்பில் நிகரற்ற சூரனாக இருந்தான். கையிலே அசாதாரண வலு இருந்ததை போல உள்ளத்திலே இரக்கமும், கருணையும், உறுதியும் இருந்தன. இப்படிப்பட்ட இளைஞர்கள் தானே நாட்டுக்கு இப்போது தேவை என்பது அவரது எண்ணம். முற்றும்