பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

னும், அதுமட்டும் போதாது. பாடசாலைப் பையன் கள் அத்தனை பேருமே உங்களுக்காகப் பொய்ச் சாட்சி சொல்லியாகணும். அதை என்னால் அனு மதிக்கவே முடியாது!??

அப்போ என்ன தான் 6ηλιτή செய்யறது?

ஐயா வரையில் விஷயம் போய் விசாரித்தால், நீங்கள் உங்கள் பகுதியைச் சொல்லுங்க; நான் எனக்குத் தகவல் கொடுத்து, உங்களையும் காப்பாத் தச் சொல்லி என் கையிலே சாவியைக் கொண்டு வந்து கொடுத்த பட்டாமணியத்தின் பெண்ணைப் பற்றிச் சொல்லித்தான் ஆகணும்! என்றார் பசுபதி.

is:

இதைக் கேட்டதும் சங்கருக்குச் “சுரீர்” என்றது. வசந்தியா மானேஜரிடம் சாவியைக் கொடுத்துத் தங்களைக் க ப் ப ற் ற உதவியிருக்கிறாள்? அவனையும் அறியாமல் அவன் கண்களில் கண்ணிர் வந்து விட்டது. எவ்வளவு கொடிய மனிதருக்கு எவ்வளவு நல்ல பெண் பிறந்திருக்கிறாள்இரணியனுக்குப் பிரகலாதன் பிறந்தது போல!-- என்று அவன் மனம் உருகியது.