பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

நடந்த விஷயங்களைக் கேட்ட சந்தானம், அதனால் என்ன? பட்டாமணியம் குணமாகி வீடு திரும்பும் வரை சங்கர் வசந்திக்குத் துணையாக அங்கேயே இருக்கட்டுமே!’ என்று கூறினரிட்டாராம்.

மறுநாள் பொழுதுவிடிந்ததும் காலை காபிபலகாரங்களை வசந்தியே சங்கரின் அறையில் கொண்டு வந்து வைத்தாள். அப்போது அவள்

கண்ட காட்சி--

சங்கர் குளித்துவிட்டுப் பட்டையாக நெற்றி யில் திருநீறு அணிந்து, அந்த அறையில் பெரிதாகத் தொங்கவிடப்பட்டிருந்த முருகன் படத்தின் முன்பு இருகரம் கூப்பி, கண்மூடி மெய்மறந்து நின்று கொண்டிருந்தான். அவனது மெல்லிய குரல் தேவாரப்பண் ஒன்றை இசைத்துக்கொண்டிருந்தது. வசந்தி அந்த அறைக்குள் வந்து நிற்பதையோ, மேஜைமீது ஆவி பறக்கக் காபி பலகாரங்கள் வைக் கப்பட்டிருப்பதையோ சங்கர் கவனித்ததாகவே தெரியவில்லை.

‘எப்போது இந்தச் சங்கர் எழுந்திருந்தா ன்; இத்தனை கருக்கில் எப்படி அவனால் பச்சைத் தண்ணிரில் குளிக்க முடித்தது’ என்பதெல்லாம் வசந்திக்கு மிக்க ஆச்சரியமாக இருந்தது. ஆம்! அப்பா இருந்தால், அவள் இன்னுங் கூடத் துரங்கிக் கொண்டிருந்திருப்பாள்!

காப்பிக்கு அடுப்பு மூட்டிக் கொண்டிருந்த கிழவி யிடம் பல்பொடி பெற்று பாத்ளும் இருக்கிற இடத்