பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (2) 131 கழலும் சிலம்பார்க்கும் எழிலார் மருதரைத் தொழலே பேணுவார்க்(கு) உழலும் வினைபோமே. (6) என்பது இதன் ஆறாவது பாடலாகும். பதிகம்.3: இது மருந்தவன் வானவன் (1.1.10) என்ற முதற் குறிப்புடையது. இதில், நிறையவன் புனலொடு மதியும் வைத்த பொறையவன் புகழவன் புகழ நின்ற மறையவன் மறிகடல் நஞ்சை யுண்ட இறையவன் வளநகர் இடைமருதே (6) என்பது ஆறாவது பாடல். பதிகம்-4 நடைமருதிரிபுரம் (1.121) என்ற முதற் குறிப்புடையது இது. வருகல மயிலன மடங்டை மலைமகள் பெருகல முலையினை பிணைசெய்த பெருமான் செருகல மதிலெய்த சிவனுறை செழுநகர் இருகல புகழ்மல்கு மிடமடை மருதே. (5) என்பது இதன் ஐந்தாவது பாடல். பதிகம்-5: இந்தப் பதிகம் விரிபுலியுரி (1.122) என்ற முதற் குறிப்பினையுடையது. சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள் நிலவிய உடலினர் கிறைமறை மொழியினர் இலரென் விடுபவி யவரிடை மருதினை - வலமிட வுடல்நலி விலதுள வினையே. (3) என்ற இப்பாடல் பதிகத்தின் மூன்றாவதாகும். பதிகம்.6: பொங்குநூல் மார்பினீர் (2.56) என்ற முதற் குறிப்புடையது இப்பதிகம். -م .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/174&oldid=856020" இலிருந்து மீள்விக்கப்பட்டது