பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

துக்கு முன்பு அவர்கள் பட்டினத்து அடிகளைப் பற்றிச் செய்த பிரசங்கத்தை நான் கேட்டேன். அதில் அவர் கூறிய விஷயங்கள் இன்னும் என்மனதை விட்டு அகலாமல் இருக் கின்றன. சில பேர் பிரசங்கமாரி பொழிவார்கள். அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது மட்டும் கேட்பவர்களுக்குத் தெரியாது. பெரியவர் அபாரமாய்ப் பேசினார்; ஆனால் அவ்வளவு பெரிய விஷயங்கள் நமக்கெல்லாம் புரியுமா? என்று சொல்லிக் கொண்டு போவார்கள். ஆனால் சுவாமி கள் பேச்சு இப்படியல்ல. அவர்கள் பிரசங்கத்தைப் படித்த வர்கள் ரசிப்பார்கள்; பாமரர்களும் விஷயம் இன்ன தென்று தெரிந்து கொள்வார்கள். மணி மணியாக முத்து முத்தாகச் சுவாமிகள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நம்மனதில் என்றும் அழியாதவாறு பதிந்துவிடும். எப்படிப்பட்ட சிக்க லான சமய உண்மையையும் சிக்கறுத்துச் சொல்வார்கள்.

'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்’ (பாரதியார்)

என்னும் கவியின் வாக்கைச் சுவாமிகளின் சொற்பொழிவுகள் மெய்ப்படுத்தும்.

பூர் ஞானியார் சுவாமிகள் திருப்பாதிரிப் புலியூர் மடாதிபதியாகி இந்த மாதத்தோடு ஐம்பது வருஷங்கள் பூர்த்தியாகின்றன. இந்த ஐம்பது வருஷ காலத்தில் சுவாமி ஆள் ஆயிரக் கணக்கான சமயப் பிரசங்கங்கள் செய்திருப் பார்கள். லட்சக் கணக்கான ஜனங்களுக்குச் சைவ சமயத் தின் உண்மைகளை எடுத்துப் போதித்திருப்பார்கள். எவ் வளவோ பேருடைய வாழ்க்கையைத் தமது உபதேசங்க ளால் புனிதப்படுத்தி யிருப்பார்கள்.

சுவாமிகள் சமயப் பணி செய்வதுடன் தமிழ்ப் பணி யும் செய்து வருகிறார்கள். எத்தனையோ பேருக்குத்