பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிப்பெருங்கோ முடியரசன்

39



ஆதவன்


நினைஆதவன் என்று நினையாதவன் - ஒன்றும்

புரியாதவன் கண்கள் திறவாதவன் - அய்யா
- நினை

மண்மேவும் அறியாமை இருள்யாவும் தொலைக்கும்

மதிமேவும் ஒளிபாயும் செயல்யாவும் விளைக்கும்
- நினை

ஆண்டவர் யார்உரிமை பூண்டவர் யாரென
அறியாமல் நினையாமல் அசையா திருந்தோம்
மூண்டெழும் போர்மறவன் போலெழுந் தார்ர்த்தனை

முன்னவர் யாமெனும் உரிமையைச் சேர்த்தனை
- நினை

கண்மூடி வழக்கங்கள் கடவுளர் விளக்கங்கள்
கதைகூறும் மயக்கங்கள் கயமையின் குழப்பங்கள்
மண்மூடிப் போகட்டும் மடமைகள் சாகட்டும்

மதிமேவி வாழட்டும் எனக்கூறி மார்தட்டும்
- நினை
20-6-1979