இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42
ஞாயிறும் திங்களும்
வேத புராணங்கள் கோடி - மக்கள்
வீரத்தை மானத்தை மூடினர் பாடி
யாதென்று காரணம் நாடி - வீரம்
- போராட்டக்
ஏடாண்ட பொய்யைப் படித்து-வாழ்வில்
ஏமாளி யாகினர் நாட்டைக்கொ டுத்து
பீடாண்டு வந்தவழி மாந்தர்- பாழும்
- போராட்டக்
நாடாண்டு வந்ததமிழ் மகனே - நீயோ
நாணிக் குளித்துடலம் கூனிக் கிடந்தாய்
கூடாண்டு வந்தபுலி மறவா- முரசம்
- போராட்டக்
21-6-1979
21-6-1979
பகலோன் வாழ்க
பகலோன் வாழ்க பகலோன் வாழ்க
- பகலோன்
புகுமிருள் கலங்கிடப் புத்தொளி துலங்கிடப்
- பகலோன்
பொய்யெது மெய்யெது புரியா திருந்தோம்
பொருளெது மருளெது கருதா திருந்தோம்
அயலெது நமதெது தெரியா திருந்தோம்
- பகலோன்
கற்பனைக் கூண்டினுள் கண்ணயர்ந் திருந்தோம்
கலகல ஒலியொடு சிறகடித் தெழுந்தோம்
பற்பல பணிகளில் பரிவுடன் புகுந்தோம்
- பகலோன்
22-6-79
22-6-79