பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

ஞாயிறும் திங்களும்



வேத புராணங்கள் கோடி - மக்கள்
வீரத்தை மானத்தை மூடினர் பாடி
யாதென்று காரணம் நாடி - வீரம்

யாவையும் மீட்டவர் வெண்ணிறத் தாடி
- போராட்டக்

ஏடாண்ட பொய்யைப் படித்து-வாழ்வில்
ஏமாளி யாகினர் நாட்டைக்கொ டுத்து
பீடாண்டு வந்தவழி மாந்தர்- பாழும்

பேதைத் தனத்தைப் பிடித்துத் தடுக்கப்
- போராட்டக்

நாடாண்டு வந்ததமிழ் மகனே - நீயோ
நாணிக் குளித்துடலம் கூனிக் கிடந்தாய்
கூடாண்டு வந்தபுலி மறவா- முரசம்

கொட்டடா கொட்டடா என்றுகளங் கண்டார்
- போராட்டக்
21-6-1979

பகலோன் வாழ்க


பகலோன் வாழ்க பகலோன் வாழ்க

பகுத்தறி வுக்கதிர் பாய்ச்சி விளக்கிடும்
- பகலோன்

புகுமிருள் கலங்கிடப் புத்தொளி துலங்கிடப்

புன்மைகள் தொலைந்திடப் பொருள்களை விளக்கிடும்
- பகலோன்

பொய்யெது மெய்யெது புரியா திருந்தோம்
பொருளெது மருளெது கருதா திருந்தோம்
அயலெது நமதெது தெரியா திருந்தோம்

அறிவொடு விழிகளை அழகுற மலர்த்திய
- பகலோன்

கற்பனைக் கூண்டினுள் கண்ணயர்ந் திருந்தோம்
கலகல ஒலியொடு சிறகடித் தெழுந்தோம்
பற்பல பணிகளில் பரிவுடன் புகுந்தோம்

பழுதறத் துயிலெழப் புதுமுறுக் கேற்றிய
- பகலோன்
22-6-79