கவிப்பெருங்கோ முடியரசன்
43
தொண்டுக்கிலக்கணங்கண்டவர்
தொண்டுக் கிலக்கணங் கண்டவர் பெரியார்
கண்டதை ஏசியும் கல்லினை வீசியும்
குளித்திடப் பன்னீர் கொடுத்திடும் செழிப்பால்
கோமான் அவரென யாவரும் அழைப்பர்
குளித்திட எனினோ முகம்மிகச் சுழிப்பார்
புகழ்ந்திடும் தோழர் போற்றின ராயினும்
பொருளென அவற்றை மதித்துளம் மயங்கார்
இகழ்ந்திடும் மாந்தர் தூற்றின ராயினும்
மலர்பல தூவிய பஞ்சணை மேவிய
மதிதவழ் மாளிகைத் துயில்வளம் படைத்தார்
அலைந்திடும் ஆண்டிகள் போலதை விடுத்தே
பகலிலும் உழைப்பார் இரவிலும் விழிப்பார்
பகுத்தறி வுச்சுடர் எழுத்தினில் படைப்பார்
மிகுமிள வேனிலும் குளிர்பனி நாளிலும்
இளையவர் எனினும் இனியன உரைப்பார்
எதிரிக ளாயினும் கனிவுடன் அழைப்பார்
இளமையை இழந்தும் முதுமையை அடைந்தும்
பிறவியில் தலைவர் பெரும்பொருள் வணிகர்
பேணிய புகழுக் குரியார் எனினும்
துறவிகள் போலொரு தோற்றமும் உடையார்
23-6-1979