44
ஞாயிறும் திங்களும்
இன்றைய நாடு
அயில்வேலும் உடைவாளும் உண்டான நாடு - இன்று
வயல்யாவும் கயல்பாயும் புனல்சூழும் நாடு
வயிறார உணவார இயலாத நாடு
மயிலாடும் குயில்பாடும் வளமான நாடு
தலையான நெறிகண்டு புகழோடு நின்றோர்
தன்மானங் கெடும்போதும் உணராத நாடு
தலைநாளில் மொழிமூன்று வகையாகி நின்றும்
கதையாகக் கனவாக எதையேனும் சொல்வார்
காணாத உலகாள வழியோதிச் செல்வார்
பொதுவாகும் பொருள்யாவும் எனுமாறு நாடிப்
அரங்கேறும் மொழியாளர் பொழிவார்கள் சொல்லை
ஆனாலும் அவர்வாழ்வில் தொடர்பேதும் இல்லை
நிறமாறும் பச்சோந்தி மரபாளர் சொல்லில்
அயலாரும் துணிவோடு சதிராடு கின்றார்
அறிவாளர் திறம்யாவும் விழலாக நின்றார்
மயலோட மதிவாழ ஒருநாளும் எண்ணார்
புயலாகப் பகைசூழும் பொழுதாதல் கண்டும்
புழுவாக இனம்வீழும் நிலையாவுங் கண்டும்
செயல்காணத் துணிவேதும் உருவான துண்டா?
பெரியாரும் அறிவாளர் பலபேரும் வந்து
பெரும்பாடு பட்டாலும் உருவான தென்ன?
அறியாமை இருள்மூழ்கித் தடுமாறு கின்றார்
24-6-1979