பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிப்பெருங்கோ முடியரசன்

73



| யாழ் உடைந்தது ) விண்மீன்கள் புடைசூழ்ந்து நிற்க, வான வெளியினிலே முழுமதியொன் றொளிரக் கண்டோம், மண்மீது பயிர்தளிர்க்க உயிர்த எளிர்க்க வளர்நிலவைப் பாய்ச்சியது மகிழ்ந்தோம் அந்தத் தண்மதியை முகிலொன்று வந்து சூழத் தன்னொளியும் மங்கியது மயங்கி நின்றோம் *கொண்மூதான் விலகிவிடும் மேலைக் காற்று கூடிவரும் காலமிதென் றெண்ணி நின்றோம். காற்றடித்த வேகத்தாற் கொடிய மேகம் கலைந்ததுகண் டொருவாறு தேறி நின்றோம் கூற்றெடுத்த படையெடுப்பில் தோற்று விட்டோம் குளிர்நிலவைக் கருணையிலான் விழுங்கி விட்டான், காற்றடிக்கச் சிதறுண்ட மேகம் எங்கள் கண்களிலே புகுந்துநிலை நின்ற தம்மா! கூற்றுதற்குப் பசியெடுத்தால் இந்த நாட்டைக் குளிர்விக்கும் முழுமதிதான் கிடைத்த தேயோ? வடிவமைந்த யாழொன்று தனது கையில் வைத்திருந்தாள் தமிழன்னை அதனை மீட்டிப் படிமுழுதும் இசைமயமாப் படைத்து நின்றாள் படர்ந்துவரும் இசைத்தேனைப் பருகி மாந்தர் உடல்நிமிர்ந்தார் உளம்நிமிர்ந்தார் உயர்வும் உற்றார் உயர்விதனைப் பொறுக்ககிலாக் காலன் என்னும் கொடியஒரு பாவியவன் யாழ்ப றித்தான் குமுறியழ முகாளிப்பண் பாடு கின்றான்.

  • கொண்மூ - மேகம்