பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிப்பெருங்கோ முடியரசன்

75



திருக்குறளாம் தெளிதேனைச் சங்கம் தந்த திங்கனியாம் இலக்கியத்தைத் துய்த்துத் துய்த்துத் தெருக்களெலாம் தமிழ்முழக்கம் செய்து நின்றாய்! தேயமெல்லாம் தமிழோசை பரவச் செய்தாய்! உருத்தெழுவாய் தமிழுக்குத் தீங்குண் டென்றால்! உவந்திடுவாய் தாய்மொழிக்கோர் ஆக்கங் கண்டால்! இருக்கின்ற தமிழ்ப்பணியை விட்டுச் செல்ல எவ்வண்ணம் மனந்துணிந்தாய்? அண்ணா! அண்ணா! பழகுதமிழ் நிலையுயரப் பாடு பட்ட பண்பாளர் தமிழ்ப்புலவர் உருவை எல்லாம் அழகியநற் சிலைவடிவில் படைத்துப் போற்றி ஆழிநெடுங் கரையருகே வரிசை செய்தாய்! தொழவுரியர் சிலையருகே நீயும் சென்று துயவனே நிலையாக அமர்ந்து விட்டாய்? பழையதமிழ் நிலையுணர்ந்து பாடங் கேட்கும் பற்றாலே அவ்வண்ணம் அமர்ந்தாய் கொல்லோ ? மணப்பாட்டின் ஒலிகேட்க அறுபான் ஆண்டு மணித்திருநாள் நினக்குவரும் அந்நாள் என்றன் மணிப்பாட்டை நின்னடிக்குப் படைப்பேன் என்று மனக்கோட்டை கட்டிவைத்து மகிழந்தி ருந்தேன் பிணப்பாட்டுப் பாடவைத்து மறைந்தாய் அண்ணா பேச்சாலே கோட்டைதனைப் பிடித்தாய் என்றன் மனக்கோட்டை மூச்சாலே இடித்தாய்! இந்த மனவேறு பாடெதற்குக் கொண்டாய் அய்யா! பண்பாடு பண்பாடென் றுரைத்து ரைத்துப் பகைதழுவும் நெஞ்சத்தார் தம்மை யும்போய் நண்போடு தழுவியநற் கைககள் எங்கே? நலமிக்க ஒளிவிளக்காய் வந்த கோவே கண்பாடு கொண்டனையே கல்ல றைக்குள் காரணமென்? அரசியலில் நீநி னைத்த பண்பாடு காணாத ஏக்கத் தாலோ ? பதறியழ எமைவிடுத்துச் சென்று விட்டாய்? 75