பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிப்பெருங்கோ முடியரசன்

89



அண்ணா வழியில் அயராதுழைப்போம் சங்கங்கள் மூன்றமைத்துப் புலவர் வேந்தர் சமமாக வீற்றிருந்து தமிழைக் காத்தே எங்கெங்கும் புகழ்மணக்கத் திகழ்ந்த நாடு ; வணிகத்தைப் போர்த்திறத்தை எடுத்துக்காட்ட வங்கங்கள் பலசெலுத்தி வளர்ந்த நாடு ; வளமிக்க அரசியலைத் தெரிந்த நாடு ; நங்கையவள் காவிரித்தாய் வளர்த்து விட்ட நாகரிகத் தொட்டிலென வாழ்ந்த நாடு. எங்கெங்கோ திரிந்தவர்கள் இங்கு வந்தார் ஏமாந்த தமிழினத்தார் மனம்நெ கிழ்ந்தார்; அங்கங்கே அமர்ந்தவர்கள் துறைகள் தோறும் ஆரியத்தின் கொள்கைகளை புகுத்தி விட்டார்; தங்கங்கள் நிறம்மாற ஒளியும் மாறத் தந்திரங்கள் மந்திரங்கள் பூசி விட்டார் சிங்கங்கள் குள்ளநரிக் கடிமை யாகிச் சீர்கெட்டு வாழ்ந்திடவே மாயை செய்தார். தென்னாட்டை, வந்தவரால் அடிமையான திருநாட்டைச் சீர்திருத்தி மீண்டும் சங்கப் பொன்னாட்டை உருவாக்கச் சினந்தெ ழுந்த o போராட்டப் பெரியார்ஒர் பாட்டை கண்டார் ; தென்பூட்டும் ஈரோட்டார் தனித்து நின்றே திருகுகள்ளி முட்புதர்கள் கள்முள் காளான் மின்காட்டும் நச்சரவம் மலியுங் காட்டை மேம்படுத்தச் செப்பனிட வழிய மைத்தார்.