கவிப்பெருங்கோ முடியரசன்
89
அண்ணா வழியில் அயராதுழைப்போம்
சங்கங்கள் மூன்றமைத்துப் புலவர் வேந்தர்
சமமாக வீற்றிருந்து தமிழைக் காத்தே எங்கெங்கும் புகழ்மணக்கத் திகழ்ந்த நாடு ;
வணிகத்தைப் போர்த்திறத்தை எடுத்துக்காட்ட வங்கங்கள் பலசெலுத்தி வளர்ந்த நாடு ;
வளமிக்க அரசியலைத் தெரிந்த நாடு ; நங்கையவள் காவிரித்தாய் வளர்த்து விட்ட
நாகரிகத் தொட்டிலென வாழ்ந்த நாடு.
எங்கெங்கோ திரிந்தவர்கள் இங்கு வந்தார்
ஏமாந்த தமிழினத்தார் மனம்நெ கிழ்ந்தார்; அங்கங்கே அமர்ந்தவர்கள் துறைகள் தோறும்
ஆரியத்தின் கொள்கைகளை புகுத்தி விட்டார்; தங்கங்கள் நிறம்மாற ஒளியும் மாறத்
தந்திரங்கள் மந்திரங்கள் பூசி விட்டார் சிங்கங்கள் குள்ளநரிக் கடிமை யாகிச்
சீர்கெட்டு வாழ்ந்திடவே மாயை செய்தார்.
தென்னாட்டை, வந்தவரால் அடிமையான
திருநாட்டைச் சீர்திருத்தி மீண்டும் சங்கப்
பொன்னாட்டை உருவாக்கச் சினந்தெ ழுந்த
o போராட்டப் பெரியார்ஒர் பாட்டை கண்டார் ;
தென்பூட்டும் ஈரோட்டார் தனித்து நின்றே
திருகுகள்ளி முட்புதர்கள் கள்முள் காளான்
மின்காட்டும் நச்சரவம் மலியுங் காட்டை
மேம்படுத்தச் செப்பனிட வழிய மைத்தார்.