பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
'டானா' முத்து /41


வழக்கம் போல ஞாயி றன்று
புழைக்கடைக் கொட்டகையில் தணிகா சலனார்
நுழைந்து திருக்குறள் நூலைப் பிரித்தார்!
வழியும் அன்புடன் அதிலொரு கடிதம்!


'அருளே வடிவாம் மாமா! அத்தை!
சிறுவன் வணக்கம்! சேமிப்பு நிதியில்
இருபது ரூபாய்கள் மட்டும் செலவுக்கு
நிரம்பவும் வருந்தி எடுத்துச் செல்கிறேன்!


பிச்சைக் காரன்போல் புகுந்த என்னை
அச்சம் போக்கி; அறிவு ஊட்டி
இச்சையுடன் ஆளாக்கி வைத்தீர்! நன்றி!
நிச்சயம் மீண்டும் விரைவில் வருகிறேன்!

நன்றிக் கடனாய் எனக்கொரு கடமை
அன்று தொட்டே அழைக்கிறது என்னை!
இன்று போகிறேன்! எல்லோர்க்கும் நன்றி!
என்றுமே உங்களை மறவா முத்து!'