இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
‘டானா முத்து'/ 67
ஆத்திரம் தீர வேலுவையே
அன்றும் நன்றாய் அடித்திட்டாள்!
பாத்திரம் எல்லாம் விற்று விட்டாள்!
பயணம் புறப்பட நாள் குறித்தாள்!
"செத்தே மடிந்து போனாலும்
சென்ம பூமியை நான்பிரியேன்!
புத்தியைக் குழப்பாதே சில நாட்கள்
பொறுப்போம்!" என்றார் மாமாதான்!
6
மாமியின் கொடுமை தாளாமல்
மாமாவின் பாசம் தனைஎண்ணி
சாமி வேலுவும் வழக்கம்போல்
தனியே கழனிக்கு வந்திட்டான்!
மனசு துன்பப் பட்டாலும்;
வயிற்றில் பசிதான் இருந்தாலும்
தனது உணர்வே இல்லாமல்
தலைசுற்றி வேலுவும் விழுந்திடுவான்!