தஞ்சைச் சிறுகதைகள்
233
நித்யா, இது வேணும் அது வேண்டாம்னு பிரித்துப் பிரித்து அடம் பிடிக்கிற மனகதான் அழும். உன்னைப்புரிந்து கொள்.”
தலையை வருடி முதுகைத் தட்டி கட்டிலில் அமர்ந்து கைக்குட்டையால் முகத்தின் கறுப்பைத் துடைத்து கண்ணீரை ஒற்றி. “உன் முகத்தை மறக்கக் கற்றுக் கொள்ளணும். இது சுலபம். உன்னால் இது முடியும்.”
இரண்டு நிமிஷம் என் கைகளை அழுத்தப் பிடித்துக் கொண்டிருந்துவிட்டு விடை பெற்றுப் போனார். ஊருக்குப் போகிறாராம். இன்னொரு டூராம்.
நான் சோப்பும் டவலும் எடுத்துக்கொண்டு சொச்சத்தை அழிக்கக் குளியலறைக்குள் நுழைந்தேன்.
ஈரம் சிதற மீண்டும் ஹாலுக்கு வருகையில் அம்மாவின் குரல் கேட்டது. அம்மா பாத்திருப்பாளா?
“பையனைப் பார்த்தா நல்லவனா தெரியறான். ஆனா கலயாணம் ஆயிடுத்தாமே!” அப்பாவும் பார்த்திருக்கிறார்.
“ஒரு குழந்தைகூட இருக்குன்னு என்கிட்ட சொல்லியிருக்கா நித்யா.” இது அம்மாவின் பதில்.
“விறுவிறுண்னு போய் குழந்தைக்குப் பக்கத்தில் உட்கார்ந்துடறான்”
“உம்.”
“இத்தனை இதம்மா நம்ம பெண் கிட்ட நாம கூடப் பேசினதில்லை. நீங்க தொண்டையைக் கனைச்சுண்டு உள்ளே போவேளோன்னு நினைச்சேன்.”
“நான் எதுக்குப் போகனும்? அவள் சந்தோஷமாக இருந்தா சரி.”
“இவனோட பழகறதுக்கப்புறம் சந்தோஷமாதான் இருக்கா. வாய் ஓயாம ஆபீஸ் பத்திப் பேசறா. யார் சொன்ன ஜோக்கையோ இங்க சொல்லிச் சிரிக்கிறா”
“ஆனா அந்தப் பையனுக்கு கல்யாணமாயிடுத்து.”
“ஒரு குழந்தை வேற இருக்கு. எதுக்கும்மா இதெல்லாம்னு நெஞ்சு வரைக்கும் கேள்வி வருது. கேட்டுடலாமான்னு படறது.”
“நீ ஒண்ணும் கேட்க வேண்டாம். பேசாம விடு”
“விடச் சொல்றேளா?”
“வேறென்ன பண்றது? எத்தனை நாள் சந்தோஷமா இருக்காளோ, அத்தனை நான் சந்தோஷமான இருக்கட்டும்.”
“வைப்பாட்டியாவா?” அம்மா முழங்காலில் கரும்பு உடைக்கிற வேகத்தோடு கேட்கிறாள்.
சிலீரென்ற ஒரு பொட்டு சோப்பு நீர் உதட்டில் இறங்க அனிச்சையாய் நாக்கு நுனியில் நெருடுகிறேன். கொஞ்சம் இனிப்பாய் காரமாய் கசப்பாய் என்னனென்னவோவாய் ஒரு சுவை பரவுகிறது.