பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 123 மூநிலையில் என்று ஆராயத் தொடங்குகிறார். இதி லிருந்து நாம் அறிய வேண்டிய உண்மை ஒன்றுண்டு. நம்முடைய முன்னோர்கள் காலத்திற்கேற்பத் தம்வழி முறைகளை மாற்றிக்கொண்டு உலகிற்கும் பயன்பட அஞ்சியதில்லை. திருஞானசம்பந்தப் பெருமான் காலத்தில் பரவி இருந்த சைன சமயக் கொள்கைகள் அறிவைப் பெரிதும் நம்பி இருந்தன. அறிவின் துணைகொண்டு மட்டும் எல்லாவற்றையும் ஆய்ந்துவிட முடியாது; அது அனைவருக்கும் ஏற்புள்ள வழியுமன்று என்பதை வலி யுறுத்தற்காக ஞானசம்பந்தர் பக்திமார்க்கத்தை வலியுறுத் தினார். ஆனால் 12-ம் நூற்றாண்டின் பின்னர் உள்ள தமிழகத்தில் மறுபடியும் சூழ்நிலை மாறிவிடுகிறது. அறிவை வலியுறுத்தி அதன்மூலம் மக்களுடைய பலவாகிய தேவையற்ற நம்பிக்கைகளைப் போக்கவேண்டி சூழ்நிலை ஏற்படுதலின் மெய்கண்டதேவர் போன்றவர்கள் ஏதுக் களையும் எடுத்த மொழியையும் கொண்டு பொருளின் உண்மையைச் சாதிக்கப் புகுந்தனர். சர்க்கரையின் இயல்பை நாவில் இட்டுக் காட்டும் திருஞானசம்பந்தரும், சோதனைக் குழாயில் போட்டு அதன் இயல்பை விளக்கும் மெய்கண்டாரும் இரண்டு வேறுபட்டவழிகளை மேற்கொண்டார்கள், இவ்வாறு கூறுவதால் ஒருவர் வழி தவறு என்றோ மற்றொருவர் வழி சரியானதென்றோ கூறல் முடியாது, காலத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நம் பெரியோர்கள் தாம் கூறும் வழிகளை மாற்றிக் கொண்ட னர். திருஞானசம்பந்தர் கூறியதற்கு எதிராக மெய்கண்டார் கூறியதனால் நால்வர் வழியை மீறிவிட்டார் என்றோ அவர் சைவத்தை எதிர்த்துப் புதுவழி கண்டார் என்றோ யாரும் குறை கூறத் துணிவதில்லை யன்றோ?