124 0 அ. ச. ஞானசம்பந்தன் சாத்திர தோத்திர வழிகள் : தோத்திரவழி (பக்திவழி), சாத்திர வழி என்ற இரண்டும் மக்கள் முன்னர் வைக்கப்பட்டன. அவரவர் பக்குவத்திற்கேற்ப அவரவர் தாம் மேற்கொள்ளும் வழியை அறிந்து ஏற்றுக்கொண்டனர். இனிப்புப் பண்டமும் காரப் பண்டமும் பசியைப் போக்க உதவு கின்றனவெனில் ஒன்றிற்கொன்று உயர்வு தாழ்வு கற்பிப்பது எங்ங்னம்? இதை நன்கு புரிந்துகொண்டால் சாத்திர வழிக்காரர்கள் தோத்திர வழிக்காரர்களை மறுத்துரைக்கவோ இவர்கள் அவர்களை மறுத்துரைப் பதற்கோ வழி இல்லாமற் போய்விடும். இக்கருத்து நம்முடைய நாட்டைப் பொறுத்தவரைப் புதுமையானதன்று. திருமுருகாற்றுப்படை ஆசிரியர் இதனை வலியுறுத்திக் கூறுகிறார். சேவடி படரும் செம்மல் உள்ளம் ஒன்றுதான் தேவையானது. அது மட்டும் இருந்துவிட்டால் இன்னே பெறுதி நீ முன்னிய வினையே! என்று கூறுகிறார். வேண்டப்படுவன ஒரு குறிக்கோளும் நெஞ்சில் உறுதியுமேயாம். அவை இருக்கு மானால் எந்தவழியை மேற்கொண்டாலும் தவறில்லை. இறுதியில் பயன் பெற முடியும். உலகையும் அது இருக்கும் சூழ்நிலையையும் நன்கு. எடுத்துக் காட்டுகிறார் திருமூலர். நிலையற்ற உலகம் என்பதனால் அதனை அனுபவிக்கக் கூடாது என்ற கருத்தில்லை. ஆனால் இந்த அனுபவமே எல்லாம் என்று நினைக்கின்ற தவற்றை மனிதன் செய்துவிடக் கூடாது. என்பதே இவருடைய நோக்கம். மனிதனுக்கு இருதயம் என்ற ஒன்று இருக்கிறது என்பதையே பிறநாட்டார். அறிந்து கூறுவதற்கு முன்னர் திருமூலர். அது இருப்பதை யும், அதுவும் இடப்பக்கத்தில் இருப்பதையும், அது தாக்கப்பட்டால் இறப்பு வெகு விரைவில் கிட்டும். என்ப
பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/137
Appearance