பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 127 குவது என்ற விடை வரும். 'சிவம்’ என்றால் என்ன என்ற வினாவிற்கு அன்பே சிவம்' என்ற விடையை மூவர் தருகிறார் அப்படியானால் சிவனை வணங்குதலும், சிவத்தோடு இரண்டறக் கலக்க விழைவதும் அன்பை வணங்கலும் அன்புடன் இரண்டறக் கலத்தலும் வேண்டப் படுவன என்று கூறுவதால் தவறில்லை. அன்பு செய்தலே சிவ வழிபாடு : அன்புடன் கலத்தல் என்பது அன்பே வடிவாக ஆதல் எனப் பொருள்படும்.அன்பே வடிவாக ஆகிறவர்கள் பிறர் பொருட்டாக வாழுகின்ற பெரியோர்களே யாவர்.எனவே பிற உயிர்கட்குத் தொண்டு செய்வதே அன்புடன் கலத்தல் அல்லது சிவத்துடன் கலத்தல் என்று தருக்க ரீதியாகக் கூறிவிடலாம். இவ்வுண்மையை அறியாமலும், அறிய மறுததும் இறைவனை வழிபட்டு வேறு ஏதோ பயனை அடையப் போவதாக நினைப்பவர்கள் யார் என்ற வினாவை எழுப்பிக் கொண்ட மூலர் அவர்கள் சிவ தத்து வத்தை அறியாத அறிவிலிகள் என்ற கருத்தில் 'அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்' என்றும் கூறிப் போனார். சிவ வழிபாடு என்பது உயிர்கண்மாட்டு அன்பு கொண்டு தொண்டு செய்தலே என்பதை இத்துணை அழகாகவும், விளக்கமாகவும், தருக்க முறையிலும், கூறி உள்ளனர் நம் முன்னோர் என்பதை இக்காலத்துக் கேற்ப எடுத்துக் காட்டாத நாம் சைவர்களா? இல்லை. சைபர்கள். - - இத்துணை உயர்ந்த நிலையிலிருந்த சைவம் அடுத்த காலத்தில் வெள்ளியில் இலிங்க வடிவம் வைத்து வழிபட் டால் என்ன பயன் தங்கத்தில் வைத்து வழிபட்டால் என்ன பயன் என்றும், வெள்ளைமலரால் அருச்சித்தால்