பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் இ 129 உய்கதிகாட்டுகின்ற முறையில் இருந்த சமயம், மக்கள் பாழ்க்கையில் இரண்டறக் கலந்து அவர்கள் இரத்த ஆட்டத்தோடு கலந்திருந்த சமயம் இன்று வெறும் வெளிப் பூச்சாய்ஆரவாரமுடைய சடங்குகளாய் நின்றுவிட் உமையின் உண்மைச்சமயத்தைப்பற்றிக் கவலைப்படுவார் ாரும் இல்லாமற் போய்விட்டனர். ‘அப்பாலும் அடி சார்ந்தார் அனைவரையும் உளப் படுத்திக்கொண்டு அகில உலகத்திலும் உள்ளார், அனை வருக்கும் பொதுவாக இருந்த சமயம் இன்று இருக்கும் நிலை யாது? இன்று சைவ சாப்பாடு' என்று கூறுகின்ற முறையில் சாப்பாட்டுச் சைவமாகி நிற்கும் அவல நிலை ரன்? இறைவனுக்கு செய்யும் தொண்டைவிட உயிர்கட்குச் செய்யும் தொண்டே சிறந்தது என்றும் அதில்தான் இறை வனும் மகிழ்கிறான் என்றும் கூறிய சைவ சமயம் உண்மை பிலேயே உலக சமயங்களுள் மிக உயர்ந்தது என்பதில் ஐயமில்லை. இதனை உலகம் முழுவதற்கும் எடுத்துக் கூறிச் சேரவாரும் சகத்திரே என்று அழைக்க வேண்டிய வர்கள் தமிழர்களாகிய நாம், இத்தகைய சமயத்தையும் அதன் உண்மையான தத்துவத்தையும் உள்ளவாறு எடுத்துக் கூற முற்பட்டால் ஓயாத அல்லலிற் சிக்கித் தவிக்கும் இன்றைய உலகம் உடனே செவிசாய்க்கும். மனிதன் சந்திர மண்டலத்துக்குப் போனாலும் அவனுடைய மனம் அவன் கூடத்தான் போகிறது. மனம் அடங்கக் கற்காவிட்டால் எந்த மண் டலத்திற்குச் சென்றாலும் அமைதி கிட்டாது. எனவே மனிதன் பெறவேண்டிய அந்த ஒப்பற்ற அமைதியை உள்ளவாறு எடுத்துக் கூறும் திருமூலர்' போன்ற நூல் களை நம்முடைய பூசைப் பெட் டியை விட்டு வெளிக் கொணர்ந்து காலத்திற்கேற்பப் பரப்பினால் நாமும் உலகமும் உய்வோம். இக்கருத்தை முன்னரே சோழப் த.ப.9