பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமயம் 'மருந்து அவை மந்திரம் மறுமைநல் நெறியவை மற்றும் எல்லாம் அருந்துயர் கெடும் அவர் நாமமே சிந்தைசெய் r நல்நெஞ்சமே! பொருந்து தண்புறவினில் கொன்றைபொன் . சொரிதரத் துன்றுபைம்பூம் செருந்தி செம்பொன் மலர் திருநெல்வேலி உறை செல்வர்தாமே -3-92-1

  • *

பெரியோர்களே ! தாய்மார்களே ! ! சகோதர, சகோதரிகளே ! ! சைவசித்தாந்த சபையின் 67-வது ஆண்டு விழாவைக் கொண்டாடத் திக்கெலாம் புகழ் உறும் திருநெல்வேலி உறைசெல்வர் திருவடியில் கூடி இருக்கும் உங்கள் அனை வருக்கும் என்னுடைய பணிவார்ந்த வணக்கங்கள் உரிய னவாக. ஏறத்தாழ 35 ஆண்டுகளின் பின்னர்ச் சைவ சித்தாந்த மகா சமாசத்தில் பங்குபெறும் ஒருநிலை ஏற். பட்டது குறித்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள் கிறேன். - 24-12-72 அன்று நடைபெற்ற திருநெல்வேலி சைவ சித்தாந்த மகா சமாஜத்தில் நிகழ்த்திய தலைமை உரை. .