பக்கம்:தந்தையும் மகளும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

153

உண்டாவதில்லை. இதை பாஸ்டியர் எவ்வித சந்தேகத்துக்குமிடமில்லாதபடி நிரூபித்துக் காட்டிவிட்டார்.

அப்படியானால் உயிரானது எங்கிருந்தேனும் பூமிக்கு வந்து சேர்ந்திருக்கவேண்டும் என்று எண்ணுவாய். ஆம் அம்மா, அப்படித்தான் அறிஞர்கள்

சிலர் எண்ணுகிறார்கள். அம்மா! இரவில் சில வேளைகளில் நட்சத்திரம் எரிந்து விழுகிறது என்று கூறுகிறாய் அல்லவா! அது நட்சத்திர மன்று. சூரியனைச் சுற்றிவரும் வால் நட்சத்திரத்திலிருந்து பிரிந்து விழும் ஒரு துண்டாகும். அதுதான் ஆதியில் உயிருள்ளவற்றைப் பூமிக்குக்கொண்டு வந்திருக்க வேண்டும் என அந்த அறிஞர்கள் கருதுகிறார்கள்

ஆனால் அறிஞர்களுள் வேறு சிலர் பூமியிலேயே தான் உயிர் உண்டானதாக எண்ணுகிறார்கள். பூமி குளிர்ந்த பின் ரசாயனப் பொருள்கள் உண்டாகி அதிலிருந்து உயிர்ப் பொருளாகிய புரோட்டோபிளாஸம் என்பது உண்டாயிற்று என்று சொல்லுகிறார்கள்.

புரோட்டோபிளாஸம் என்பது புரதம் என்னும் ரசாயனப் பொருளால் ஆனது. வைரஸ் என்ற மிக நுண்ணிய வஸது ஒன்று இருக்கிறது. அதைச் சாதாரண

பூதக் கண்ணாடியால் பார்க்க முடியாது. எலக்டிரான் பூதக் கண்ணாடியினால்தான் பார்க்க முடியும். பாக்டீரியாவைவிடக் கூடப் பத்து லட்சம் மடங்கு சிறியது. அந்தப் புரத வஸ்து உயிரணுக்களுக்குள் செல் லுமானா அங்கே அது உயிருள்ள பிராணிபோலவே பல்கிப் பெருகுகின்றது.