பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

தந்தை பெரியார்



"தாங்கள் என் கடையில் பல வருஷங்களாக எள்ளு வியாபாரம் செய்கிறீர்கள். இந்தத் தடவை தாங்கள் வராமல் தங்கள் மகனை அனுப்பியதால் என் கடைக்கு அவர் வந்தும் பேரம் கூடப் பேசாமல் வேறு கடைக்குப் போய்விட்டார். இது எனக்கு வருத்தமாக இருக்கிறது" என்று எழுதியிருந்தார்.

மகனைப் பல ஊர்களிலும் தேடி அலைந்து கிடைக்காமல் மனம் சோர்ந்து போயிருந்த வெங்கடப்ப நாயக்கருக்கு ஸ்ரீராமுலுவின் கடிதம் புதையல் கிடைத்தது போன்ற மகிழ்ச்சியை ஊட்டியது.

தன்னை மறந்து மனைவி, மருமகள் எல்லோருடைய பெயரையும் சொல்லி உரக்க அழைத்தார். என்னுடைய மகன் இருக்கிற இடத்தை பெருமாள் காட்டி விட்டார். தெய்வம் நம்மைக் கைவிடவில்லை” என்று உணர்ச்சி பொங்க உற்சாகத்துடன் கூறினார்.

அன்றிரவே வெங்கடப்பர் தன் நண்பர் ஒருவருடன் எல்லூருக்குப் புறப்பட்டார்.

வியாபாரி ஸ்ரீராமுலுவின் உதவியுடன் சுப்பிரமணிய பிள்ளை வீட்டிற்குச் சென்றார்.

வெங்கடப்பரை சுப்ரமணிய பிள்ளை அன்புடன் வரவேற்று உபசரித்தார்.

வந்ததுமே, "சுப்ரமண்யம்... என் மகன் எங்கே?" என்று கேட்டார் வெங்கடப்பர் அருகிலிருந்த மகனை அடையாளம் தெரியாமல்.

"இதோ நான்தான் அப்பா" என்று நெஞ்சைத் தொட்டுச் சொன்னார் இராமசாமி.