பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

93


உத்சவங்களை விமரிசையாக நடத்த வேண்டிய செளகரியங்களைச் செய்தார்.

பாழடைந்த கோயில்களைப் புதுப்பிக்கத் திருப்பணிக் குழுக்களை அமைத்தார். வழக்கமான ஆலய திருவிழாக்களை முன்னிலும் சிறப்பாக முன்னின்று நடத்தினார்.

ஈ.வெ.ரா.வுக்கு முன் அப்பதவிகளை நிர்வகித்து வந்தவர்கள், கோயில் பணங்களை வீண் செலவு செய்து திருப்பணிகள் நடத்தக்கூட பணமில்லாமல் கடனில் இருந்தது.

ஈ.வெ.ரா. பதவிக்கு வந்தபின், பல திட்டங்கள் வகுத்து சிக்கனத்தைக் கடைப்பிடித்து அனாவசியச் செலவுகளைத் தவிர்த்தார்.

பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல் பணத்திற்கும் நன்கொடைகளுக்கும் ஏற்ப சரியான வரவு செலவு கணக்குகளைக் கையாண்டார். கையிருப்புகளை வங்கியில் வட்டிக்குப் போட்டார்.

ஈ.வெ.ரா. பதவிக்கு வந்தபோது இருந்த பழைய கடன்களை அடைத்து; பதவி விலகும் போது ஐம்பதினாயிரத்திற்கும் மேல் கையிருப்பும் வைத்துவிட்டு வந்தார்.

ஆலய அறங்காவலராக இருந்தபோது ஈ.வெ.ரா. ஆற்றிய தொண்டுகளையும் அவரது நிர்வாகத் திறமையையும் மக்கள் புகழ்ந்தனர்.

விரைவிலேய ஈ.வெ.ரா.வுக்கு நகரப் பாதுகாப்புக் கழகத் தலைமைப் பதவி கிடைத்தது.