பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

144


சென்றாலும், கட்சிக்குக் கெட்ட பெயர் தேடித்தரக் கூடியவர்களே! ஆகையால் இவர்கள் போவதுதான் நல்லது. கட்சியே இவர்களை வெளியேற்றுமுன், தாமே சென்றுவிட்டது அவர்களுக்கே நல்லது! இன்னும் இம்மாதிரி, வெளியேற்றப்படவேண்டிய சிலர் இருக்கிறார்கள்; அவர்களும் போய்விட்டால் நீதிக்கட்சிக்கு உதவியவர் ஆவார்கள்! இப்படிக் குடியிருந்த வீட்டுக்கு கொள்ளி வைக்கும் ஆட்களுக்குப் புகலிடமாய்க் காங்கிரஸ் இருப்பதும் மகிழ்ச்சியே!” எப்படி?

பதவி ஏற்ற காங்கிரசார் வாக்குறுதிகளை மறந்தனர்; கொள்கைகளை மறந்தனர்; செயல்பட மறந்தனர்; மொத்தத்தில் வந்த வேலையை மறந்தனர்; மக்களையே மறந்தனர்! தவறு கண்டவிடத்துத் தயவு தாட்சண்யம் பாராமல் தட்டிக் கேட்கும் பெரியாரின் இயல்பு பீரிட்டுக் கிளம்பிற்று. “விடுதலை”யும், “குடி அரசும்” வெடிகுண்டுகளாக வீசின!