பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

285

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



19.1.57, 20.1.57 இரு நாட்களும் திருச்சியில் திராவிடர் கழக, சாதி ஒழிப்பு மாநாடுகள் சீருடன் நடந்தேறின. நாடு முழுவதும் தேர்தல் காற்று சூடாக வீசிக்கொண்டிருந்த நேரம். திருச்சியில் 1956-ல் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக இரண்டாவது மாநில மாநாட்டில், பொதுமக்கள் வாக்கெடுப்பு மூலமாகக் கருத்தறிந்து, தேர்தலில் தி.மு.க. ஈடுபட்டது. காமராசர் கரத்தை வலுப்படுத்துவோம் என்ற கொள்கையினடிப்படையில், பெரியார் தமது ஆதரவு முழுவதையும் காங்கிரசுக்கே திரட்டித் தந்தார். காமராசர் ஆட்சியின் சாதனைகளைப் பெரியார் போல் ஒழுங்காகப் பட்டியல் போட்டுக் காண்பிக்கக், காங்கிரஸ்காரர்களாலும் இயலவில்லை. முக்கியமான பிரச்சார இயந்திரமே பெரியார்தான்! கண்ணீர்த்துளிப் பஞ்சபாண்டவர்களை முறியடிப்போம்! புறப்படுங்கள்! - என்று பெரியார் கழகத் தோழர்களை உற்சாகப்படுத்தினார். திட்டம் ஏதுமில்லா ஊதாரிகள், கண்ணீர்த்துளிகள் - என்று விமர்சித்தார் பெரியார். காங்கிரஸ் ஆதரவு என்பது சில இடங்களில் பார்ப்பனரை ஆதரிக்கும் சூழ்நிலையைத் தோற்றுவித்தது. அப்போதும் பெரியார் பின்வாங்கவில்லை. டி.டி.கிருஷ்ணமாச்சாரியை ஆதரித்தும், டாக்டர் ஏ.கிருஷ்ணசாமியை எதிர்த்தும் பெரியார் பேசி வந்தார்.

காஞ்சிபுரத்தில் அண்ணா , உடுமலையில் மதியழகன், நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் சம்பத், குளித்தலையில் கலைஞர் மு.கருணாநிதி, சேலத்தில் நாவலர் இரா. நெடுஞ்செழியன் - இவருக்கு உதயசூரியன் சின்னம் கிடைக்காமல் கோழிச்சின்னம் கிடைத்ததையும் கிண்டல் செய்து பேசினார்கள்) ஆகிய ஐந்து பேரையும் நிச்சயம் தோற்கடிக்க வேண்டும் என்று திட்டமிட்டார்கள் திராவிடர் கழகத்தார். ஐந்தில் இரண்டு பழுதில்லை என்ற பழமொழியே மெய்யாயிற்று. தி.மு.கழக வேட்பாளர்கள் தோற்கத்தோற்க, மண்ணைக் கவ்விய கண்ணீர்த் துளிகள் என்ற பட்டியல், கவிஞர் கண்ணதாசன், முதல் பெயராய்த் திகழ, நாள்தோறும் “விடுதலை”யில் வெளிவந்தது. இந்நிலையில் காமராசர் விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போது கிடைத்திருந்த முடிவின்படி வெற்றி பெற்ற 34 பேரில் 23 பேர் காமராசர் ஆதரவாளர்கள். எனவே பெரியார், வெற்றிப் பெருமிதத்தில் மிதந்தார். அன்று 6.3.1957. சென்னையில் 78 ஜோடிக் காளைகள் பூட்டிய ரதத்தில் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முன்னின்று நடத்தப் பெரியார் ஊர்வலம் வந்தார். காமராசர் ஆட்சி அமைந்தது. அண்ணாவைச் சேர்த்துப் பதினைந்து பேர் சட்டமன்றத்திலும், சம்பத்தைச் சேர்த்து இருவர் நாடாளுமன்றத்திலும் ஆக, முதன் முறையாகத் திராவிட முன்னேற்றக் கழகம், சட்ட சபைப் பிரவேசம்

பெரியாருடைய வாழ்க்கையில் சுவையான நிகழ்ச்சிகளுக்கோ,