374
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
பெரியாரிசம் பொங்கல்மலர் கட்டுரையில், சமதர்மத் திட்டம் என்றால் எல்லா மக்களுக்கும், ஒன்று போல, ஒரே நேரத்தில் புகுத்தப்பட வேண்டும், என்று கருத்தறிவித்தார் பெரியார்.
16.1.65 அன்று சிதம்பரத்தில், பெரியாரின் நாய் காணாமல் போய், “விடுதலை”யில் அறிக்கை வெளியிடப்பட்டது. டேஷ் ஹவுண்ட் இனத்தைச் சேர்ந்த 6 வயதுள்ள டிட்டோ அல்லது மாதோர் என்ற பெயருடையது அது. சீர்காழித் தோழர்கள் மூலமாக ஒரு வாரத்திற்குள் அது திரும்பக் கிடைத்த பின்னரே பெரியாருக்குத் திருப்தி! 17ந் தேதி பெரியார் விழுப்புரத்தில் பேசும்போது, இந்தித் திணிக்கும் பிரச்சினைக்கே இப்போது இடமில்லை - என்று குறிப்பிட்டதைப், பெரியார் இந்தியை எதிர்க்கவில்லை என்ற பொருள்பட, “இந்தியன் எக்ஸ்பிரஸ்” மிகஅவசரமாகச் செய்தி வெளியிடவும், 19-ந் தேதி “விடுதலை”யில் அந்தச் செய்தியை அப்படியே வெளியிட்டுத் தாம் பேசியதையும் குறிப்பிட்டு, “இப்படித் திசை திருப்புவது அசல் அக்கிரகாரத்தனமல்லவா?” என்று பெரியார் கேட்டார்.
‘தமிழ் தாழவும், தரங்கெட்ட இந்தி ஆளவும், தருக்கர் தர்பார் ஆணையிடுகிறது. உன் கண் எதிரே கன்னித் தமிழுக்கு ஆபத்து சூழ்கிறது’ என்று “முரசொலி”எழுதியதையும் ராஜாஜி, 'இந்தியால் தமிழ் கெடாது என்று முரண்பாடாக எழுதியதையும், “விடுதலை” எடுத்துக் காட்டியதோடு, 20, 21, 22, 23 ஆகிய நான்கு நாட்களும் தொடர்ந்து, “இந்தி எதிர்ப்பல்ல; காங்கிரஸ் எதிர்ப்பே !“ என்று தலையங்கமும் தீட்டியது. 25-ந் தேதி பெரியாரே, “பண்டிதர்களே! என்னைக் காயாதீர்கள், திருந்துங்கள்!” என்று ஒரு தலையங்கக் கட்டுரை தீட்டி, பாரதி பாடலில் “மெல்லத் தமிழினிச் சாகும்" என்ற பகுதியைத் தமக்கு ஆதரவாக்கியிருந்தார். அப்பாவி மாணவரைத்