பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

44


கொடுத்து, சுவாமிகள் வீட்டில் கொடுத்துவிட்டு வா என்று சொல்லி, அவனை வழி அனுப்புவார். இதை நானே நேரில் பார்த்திருக்கிறேன்.

இதே மாதிரி எவ்வளவு பெரிய மிராசுதாரையும் ஒரு வக்கீல் குமாஸ்தா பார்ப்பான் நாயிலுங் கீழாக மதித்து அடாபுடா என்று பேசுவான். இதுவும் நான் கண்ணால் பார்த்ததேயாகும்.”

சுயமரியாதை இயக்கத்துக்கு முன்பு, பார்ப்பனர்கள் நிலையும் உணர்ச்சியும் எப்படி இருந்தன? இப்போது எவ்வளவு மாற்றமடைந்துள்ளன என்பதை உணர்ந்தவர்களுக்கு இது நன்கு புரியுமே!