கவிஞர் கருணானந்தம்
625
1973 - ஜனவரி 1-ந் தேதியும் பெரியார் புத்தாண்டுச் செய்தி வழங்கியருளினார். “1972 - ல் நமது தி.மு.க அரசு மக்களுக்கு உணவு, கல்வி, மற்ற வாழ்க்கை வசதிகளைச் செய்து கொடுத்தது. அதனால் மக்கள் மனநிறைவோடு வாழ்ந்து வருகிறார்கள். ஆயினும் சில பேர் பொறாமையாலும், பதவி ஆசையாலும், சில தொல்லை கொடுத்து வருகிறார்கள் என்றாலும், அதையெல்லாம் சமாளித்து, அரசு பணியாற்றி வருகிறது. வேறு எந்த மாநிலத்திலும் நமது ஆட்சியில் காணப்படும் அளவு பொறுப்பும் திறமையும், மேன்மையும் இருக்கவில்லை . மேலும் நமது அரசு, முற்போக்கான மக்கள் நலக்காரியங்களைச் செய்து வர வேண்டுமானால், 1973 லும் தொடர்ந்து நம்முடைய ஆதரவைத் தந்து வர வேண்டும்” என்பதுதான் பெரியாரின் புது வருட வாழ்த்து.
மாணவர்களின் அமைதியின்மைக்குக் காரணம் கல்வித் திட்டந்தான் என்பது பெரியாரின் அசைக்க முடியாத கருத்தாகும். “மாணவர்களுக்கு கல்வி இலவசமாகி விட்டது பலருக்குச் சாப்பாடும், புத்தகமும் கூட இலவசமாகக் கிடைக்கின்றன. நிர்வாகிகள், பணம் சம்பாதிக்கும் ஒரு வழியாகக் கருதியே பல தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். ஆசிரியர்கள், சம்பளம் ஒழுங்காகக் கிடைத்தால்