பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/681

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

680

பகுத்தறிவு பகலவன் தந்தை


மரியாதைகள் அனைத்தும் நடைபெற்றன.
சென்னை நகரமே இரு நாட்கள் சோக வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தது. பல்வேறு ஊர்களிலிருந்து, பெண்டிரும் ஆடவரும் வரிசை வரிசையாக வந்து, தம்மைத் தட்டியெழுப்பித் தன்மான உணர்வளித்த தனிப்பெருந்தகையாளருக்கு அஞ்சலி செலுத்தினர்.

மக்கள் அழுவது, கடைகள் மூடியிருப்பது. ஊர்வலம்-சில காட்சிகள்.

இதோ. இங்கிருந்துதான் அந்தப் பகுத்தறிவுப் பகலவன் ஒளி வீசி வந்தது. இன்று அந்த இடம் அந்தகாரத்தில் மூழ்கிக்கிடக்கின்றது.

‘விடுதலை’ அலுவலகம். பெரியார் தங்கும் அறை.

இதோ, இந்தப் பெரியார் திடலில்தான் அந்தச் சிந்தனைக் கருமேகம் கருத்து மழை பொழிந்தது. இன்று இங்கேதான் அந்தக் காலக் கருவூலம் புதையுண்டு போனது.

பெரியார் திடலில் மக்கள் கூட்டம். பெட்டியைக் குழியில் இறக்கும் காட்சி.

அகில உலகிலும், உள்ள அனைத்துக் கட்சிப் பெரு மக்களும், ஆட்சித் தலைமையாளர்களும் அந்த வெண்தாடி வேந்தனுக்குப் புகழாரம் சூட்டுகின்றனர்.

நினைவிடம் அருகில் பல கட்சித் தலைவர்கள்.

தமிழ்மொழிஉள்ளவரையில் தந்தை பெரியாரும் வாழ்வார்!"

பெரியார் சிரிக்கும் Close up காட்சிகள்.