பக்கம்:தனித் தமிழ்க் கிளர்ச்சி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தனித்தமிழ்க் கிளர்ச்சி

அம்மானை

பெண்களின் பேச்சு


தமிழ்த் திருநாள்

பொங்குகபால் எனமுழக்கம் புரிகின்ற தைத்திங்கட்
பொங்கல்தான் தமிழ்க்குரிய புதுத்திருநாள் அம்மானை
பொங்கல்தான் தமிழ்க்குரிய புதுத்திருநாள் ஆமாயின்
தங்குதி பாவளியின் தகுதியென்ன அம்மானை
தீபா வளிவாடை தெற்குவீசிற் றம்மானை (1)

தமிழ்ச் சிறப்பு

இனித்திடுநம் தமிழ்மொழிதான் இன்னொன்றன் துணையின்றித்
தனித்தியங்கும் தகுதிபெற்ற தனிமொழிகாண் அம்மானை
தனித்தியங்கும் தகுதிபெற்ற தனிமொழியே யாமாகில்
திணித்துமிக ஆரியச்சொல் சேர்த்ததேன் அம்மானை
திணித்தனர் ஆரியர்தம் திறமையினால் அம்மானை (2)


குறிப்புரை :- முதற்செய்யுள் வடநாட்டுக் கொள்கையாகிய தீபாவளியென்னும் வாடைக்காற்றுத் தெற்கிலுள்ள தமிழ்நாட்டில் வந்து வீசிப்பரவியது.


2-ஆம் செய்யுள்-தனித்தியங்கல் = பிறமொழிச் சொற்களின் உதவி தேவையின்றித் தானே தனித்தியங்குவது.